தமிழோடு வாழ்பவன்..

My photo
சுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia
மனிதத்தை மதிக்கும் மனிதன்..

Thursday, April 23, 2009

ஞாபகம் வருதே..!

நாம் ஒரு விஷயத்தை பார்க்கும் பொழுது, அந்த விஷயம் நமது மூளையில் 15 விழுக்காடு பதிவாகிறது. பாக்கி 85% நமக்கு மறந்து விடுகிறது.

அதே போல ஒரு விஷயத்தை கேட்பதால், காதால் கேட்படால், 12% நமது மூளை அந்த விஷயத்தை ஏற்றுக்கொள்கிறது! 88% மறந்து விடுகிறது..

தொடுவதால், ஒரு விஷயத்தை 5% மட்டும் நமது மூளை ஏற்றுக்கொள்கிறது.. 95% நமக்கு அந்த விஷயம் மறந்து விடுகிறதாம்..!

பிறகு எதைச் செய்தால்.. எதைச் செய்தால் நம் மூளை ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்ளும்? நல்ல ஞாபகத்தில் இருக்கும்?

ஆம், ஒரு விஷயத்தை பற்றி நாம் வாசிக்கும் பொழுது அல்லது சொல்லிப்பார்க்கும் பொழுது, மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்க்கும் பொழுது அந்த விஷயம் நமது மூளையில் 85% விழுக்காடு வரை பதிவாகிறது!
அந்த விஷயததையே, எழுதி வாசித்தால், 85 சதவிகிதத்திலிருந்து, 95 சதவிகிதம் வரை நமது மூளையில் அது பதிவாகிறது!

இதனால்தன், மாணவர்களை, குறிப்பெழுதி படிக்க சொல்கிரார்கள். மீண்டும் மீண்டும் மீள்பார்வை, அதாவது revision செய்ய சொல்கிரார்கள். இது மாணவர்களுக்கு மட்டுமல்ல.. நம் எல்லோருக்குமே..

நல்ல ஞாபக சக்தி தேவை என்று நினைப்பவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்.. ஆக, இனி முக்கியமான விஷயங்களை ஒரு புத்தகத்தில் குறித்து வைத்துக்கொண்டு, நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பக்கங்களை புரட்டிப் பாருங்கள்.. நீங்கள் படித்த பல விஷயங்கள் உங்கள் ஞாபகத்தில் பசுமரத்தாணிபோல இருக்கும்...!

Monday, April 13, 2009

மயிலிறகு..

சின்ன வயதில், மயிலிறகை புத்தகத்தில் மறைத்து வைத்து, அது குட்டி போடும் என்று நீங்கள் காத்திருந்தது உண்டா? பென்சிலை திருகி அதற்கு தீனி போட்டது உண்டா? என்ன உங்கள் அருகில் இருப்பவர் முகத்தில் லேசான புன்னகை தோன்றுகிறதா ? அப்படியானால்.. அவரின் இளமைக்காலம் அவருக்கு நினைவவுக்கு வந்து விட்டது என்று அர்த்தம்..!
இது உங்களுக்கு மட்டுமல்ல, நம்மை போன்ற எத்தனையோ பேர் இளமைக்காலத்தில் செய்ததுதான்.. இன்னமும் பிள்ளைகள் செய்து கொண்டிருப்பதுதான்..!

சரி, மயிலிறகை புத்தகத்தில் வைக்கும் இந்த பழக்கம்.. எப்படி வழக்கத்தில் வந்தது?
அந்த காலத்தில், நமது முன்னோர்கள், ஒரு புத்தகத்தை படிக்கும் பொழுது, புத்தகக் குறியீடாக அதாவது bookmark-ஆக மயிலிறகை பயன் படுத்தி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.. அதுவே பிறகு வழக்கமாகிவிட்டது. அதற்கு குட்டி போடும் கதைகளும் பிறந்து விட்டன!
அது மட்டுமா? அந்த காலத்தில் மயிலிறகை மையில் நனைத்து, எழுதவும் பயன் படுத்தி இருக்கிறார்கள்.. இந்த மயிலிறகுக்கு.. தமிழில் ‘பீலி’ என்ற இன்னொரு பெயரும் உண்டு...
K.கிருஷ்ணமூர்த்தி

Thursday, April 2, 2009

மீன் தொட்டியும்.. வாழ்க்கையும்..

ஒரு கதை சொல்கிறேன் வாருங்கள்.. இது கட்டுக் கதை அல்ல... கற்றுக்கொள்ள வேண்டிய கதை.

ஜப்பானியர்கள் அதிகம் விரும்பி உண்ணக்கூடிய உணவு.. சுஷி! அதிலும் மீன் சுஷி என்றால் அங்கே மவுசு அதிகம், மீனுக்கும் மவுசு அதிகம்.

ஒரு காலத்தில் ஜப்பானில் மீன்பிடி தொழிலுக்கு பெரிய மருட்டலாக இருந்தது ஒரு பிரச்சனை. அதாவது, ஜப்பானியர்கள்.. பழைய மீன்களையோ, இறந்த மீன்களையோ விரும்பி உண்ண மாட்டார்கள். அவர்களுக்கு தேவை.. புதிய மீன்கள்.. வளப்பமான மீன்கள்.

அந்த காலத்தில், ஆழ் கடலில் மீன் பிடிக்கும் ஜப்பானியர்கள், பெரிய-பெரிய குளிர்சாதன பெட்டிகளை அமைத்து மீன்களை கரைக்கு எடுத்து வந்தனர். ஆனால், அந்த மீன்கள் விலை போகவில்லை. காரணம் அவை இறந்து போன மீன்கள்.. என்ன செய்வது..? அரசாங்கமே யோசித்தது.. மீனவர்களுக்கு உதவ..

பிறகு மீன்களை உயிரோடு கரைக்கு கொண்டு வர, கப்பலில் பெரிய பெரிய தொட்டிகள் கட்டி, அதில் நீரை நிரப்பி.. மீன்களை கொட்டி கொண்டு வந்தனர். தொட்டிகளில் அடைபட்டு, நீந்தாமல் சோம்பிக் கிடந்தன மீன்கள். கரைக்கு வந்த பிறகு, அந்த மீன்களும் விலை போகவில்லை! காரணம், சோம்பிக்கிடந்த மீன் இறைச்சி ருசியாக இல்லையாம்! என்ன செய்வது? மீண்டும் யோசித்தனர். பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டனர். இறுதியில் கணடாவைச் சேர்ந்த ஒரு ஆலோசகரை நியமித்தனர். அவர் சொன்ன ஆலோசனை என்ன தெரியுமா???


ஆம்.. மீன் தொட்டிகளில் சிறிய சுறா மீன்களை போடுங்கள் என்று சொன்னாராம். பிறகு என்ன நடந்தது தெரியுமா? சுறா மீன் பயத்தில் மீன்கள் நீந்திக்கொண்டே கரைக்கு வந்து சேர்ந்தன. சுறா மீன்களும் ஒன்றிரண்டு மீன்களை மட்டுமே தின்றன.. கரைக்கு வந்த மீன்களுக்கு.. இப்போது ருசியும் அதிகம்.. மவுசும் அதிகம்..!

ஆம்.. நமது வாழ்க்கையும் அந்த மீன் தொட்டி மாதிரிதான்.. சுறா மீன்கள் என்னும் சிறு சிறு போராட்டங்கள், தடங்கல்கள், பிரச்சனைகள், எதிரிகள் இவை எல்லாம் இருந்தால்தான்.. நாம் சுறுசுறுப்பாக இயங்க முடியும் என்று நினைத்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுங்கள்!

அன்புடன் K.கிருஷ்ணமூர்த்தி