தமிழோடு வாழ்பவன்..

My photo
சுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia
மனிதத்தை மதிக்கும் மனிதன்..

Saturday, January 28, 2017

காங்கேயம்..


ஏறு தழுவ வீரு கொண்ட
வீரத் தமிழா..
ஆறு சொல்லி கூடி வந்தாய்
கூறு தமிழா..

அடி மேல் அடித்தால்
அம்மிதான் நகரும்- நீ
இடிபோல் முழங்கினாய்
இந்தியாவே நகர்ந்தது..!!

அரசியல் வாதியால் ஆகாததை
ஆறே நாட்களில் சாதித்தாய்இனி
அரசியலுக்கு நீ வந்தால்
பூரிப்பாள் நம் பாரதத் தாய்..!

இங்கே இருப்பவன் எல்லாம்
ஏலம் போன அரசியல்வாதிகள்
சேலைக்கு அடங்கும் சுயநலவாதிகள்..!!

இனி ஒரு விதி செய்
அதை
உறுதியாய் உடனே செய்..!

பெப்சி கோலா மட்டும் இல்லை– இங்கே
இனி இறக்குமதியே தேவை இல்லை..!!

ஜீன்ஸ் டீசர்ட் துறந்தால்
நெசவாளி வாழ்வான்
பீசா பர்கரை மறந்தால்
விவசாயி வாழ்வான்.. !!

பெப்சி கோலா மட்டும் இல்லை – இங்கே
இனி இறக்குமதியே தேவை இல்லை..!!

இனி ஒரு விதி செய்
அதை
உறுதியாய் உடனே செய்..!

சினிமா தாகம்
வெளி நாட்டு மோகம்
எல்லாம் மறப்பாய்..
உன் தாய் நாடு வளமாக
இன்றே வகுப்பாய்..!

தை பிறந்தால் வழி பிறக்கும்
இந்த 2017 தைக்கு பிறகு
தமிழ்நாடே சிறக்கும்..!!

இனி ஒரு விதி செய்
அதை
உறுதியாய் உடனே செய்..!

பீட்டா என்பது பொருட்டல்ல- நீ
டாட்டா சொல்வது பெரிதல்ல- உன்
பாட்டன் வழியில் வாழ்ந்தாலே – வால்
ஆட்ட மாட்டான் எவனும் இனி..

தமிழ்நாடு என்பது பெரும் சந்தை – அங்கே
தமிழினம் வாடுவது பெரும் விந்தை..
தமிழனின் பொருட்கள் வாழ்ந்தாலே
தமிழனும் வாழ்வான் மறவாதே..!!

இனி ஒரு விதி செய்
அதை
உறுதியாய் உடனே செய்..!

காங்கேயம் காளைகளால்
சரித்திரம் படைத்தாய் - இனி
அதுவே சின்னமென்று
சாதிக்க வருவாய்..!!

மஞ்சள் முருங்கை எல்லாம்
மாற்றானிடம் விட்டது போதும்!
உரிமமும் உரிமைதான்
ஊருக்கு உரைப்பாய்..

காங்கேயம் என்பது உன் சின்னம் - இனி
வெங்காயம் ஆனாலும் காங்கேயம்!
காங்கேயம் என்பதை உரிமம் செய் - அதை
வாங்காமல் துயில் இல்லை உறுதி செய்!

கட்சியும் காங்கேயம் – வியாபார
புரட்சியும் காங்கேயம்..
நிச்சயம் வெல்லும் காங்கேயம்
உச்சிக்கு உயரும் காங்கேயம்..!!

காங்கேயம் சின்னத்தை – இனி
சட்டையில் பொறிப்பாய்
அதில் வரும் உரிம நிதியை
கட்சிக்கு சேர்ப்பாய்..!!

இனி,
உலகம் முழுவதும் காங்கேயம்..
உலகத் தமிழனும் பங்கேற்பான் – இதில்
கலகம் புரிந்திட நினைத்தாலே - அவனை
விலக்கி வைக்கவும் காங்கேயம்..!!

வாழ்க வாழ்க காங்கேயம்..!!
வாழ்க எங்கள் ஜல்லிக்கட்டு
வாழ்க வாழ்க காங்கேயம்
வானும் அதிர்ந்திட மார்தட்டு..!!!!

                       -கவித்தமிழ் கிருஷ்ணமூர்த்தி