காட்சி: 9.
நடிகர்கள் 1. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் 2. கான்ஸ்டபிள் காசி 3. ராதா
4. மரகதம் 5. ஷங்கர்
(ஷங்கர் பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பும் நேரம், மரகதம் அங்கே வருகிறாள்)
மரகதம் : என்னப்பா ஷங்கர்.. பெட்டி படுக்கை எல்லாம் எடுத்துகிட்டு எங்க கிளம்பிட்டே?
ராதா : அத்தை.. நீங்க எப்போ வந்தீங்க?
மரகதம் : இது.. என் மகன் வீடு.. இங்க நான் எப்போ வேணும்னாலும் வருவேன்.. ஏன்.. தப்பான நேரத்தில வந்திட்டேன்னு சங்கடமா இருக்கா?
ஷங்கர் : அண்ட்டி.. ஏன் அண்ட்டி என்னென்னமோ பேசறிங்க.. ரகுனாத் சார்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டு போய் சேர்ந்திட்டாரு..
மரகதம் : சேர வச்சிட்டிங்க.. பண்றதையெல்லாம் ஒன்னா சேர்ந்து பண்ணிட்டு.. இப்போ ஒன்னும் தெரியாதவங்க மாதிரி டிராமா பண்றிங்க.. உங்களை நான் சும்மா விட மாட்டேன்..
ராதா : உங்களுக்கு நான் என்ன சொல்லி புரிய வைப்பேனோ தெரியலை! நான் பண்ண ஒரே தப்பு.. உங்க மகன் எனக்கு பண்ண கொடுமையை எல்லாம் யாருகிட்டயும் சொல்லாம மறைச்சதுதான்..
மரகதம் : சரிதான் நிறுத்துடி! சாட்சி சொல்ல என் மகன் இல்லைன்னு.. புதுசா இப்படி கதையா? எத்தனை நாளைக்கு இப்படி நடிப்பிங்க.. உண்மை ஒரு நாள் வெளிய வரத்தான் போகுது..
(அர்ஜுனும் காசியும் அங்கே வருகின்றனர்)காசி : அந்த ஒரு நாள்.. இன்னைக்குத்தான்.. எங்க ஐய்யா எல்லாத்தையும் கண்டு பிடிச்சிட்டாரு!
மரகதம் : நல்ல வேளை வந்தீங்க.. நீங்க வர்றதுக்குள்ளே ஓடிரலாம்னு பெட்டி எல்லாம் எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாரு.. ஷங்கர்..
அர்ஜுன் : எனக்கு எல்லாம் தெரியும்.. ராதா.. ஷங்கர்.. ரெண்டு பேரும் என் கூட போலீஸ் ஸ்டேஷனுக்கு வாங்க..
ராதா : நாங்க எதுக்கு வரனும்..? இதுல எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை..
அர்ஜுன் : எதுவா இருந்தாலும்.. ஸ்டேஷன்ல பேசிக்கலாம்.. இப்ப கிளம்புங்க..
மரகதம் : கடவுள் கண்ணை திறந்திட்டாருடி.. நீ பண்ண காரியத்துக்கு..
அர்ஜுன் : (குறுக்கே பேசுகிறார்) அண்ட்டி.. நீங்களும்தான்.. எங்க கூட வாங்க..
மரகதம் : நானா? எதுக்கு? என் மகன் ராஜன் இல்லாம நான் வரமாட்டேன்..
அர்ஜுன் : அவரும் அங்கதான் வந்துகிட்டு இருக்காரு.. வாங்க..
காட்சி: 10.
நடிகர்கள் 1. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் 2. கான்ஸ்டபிள் காசி 3. ராதா
4. மரகதம் 5. ஷங்கர் 6. பாலன் 7. ராஜன்
(அனைவரும் காவல் நிலையம் வருகின்றனர். அங்கே பாலனும் ராஜனும் இருக்கின்றனர்)
ராதா : பாலன்.. நீங்க என்ன பண்றிங்க இங்கே?
பாலன் : என்னை மண்ணிச்சிரு ராதா.. நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன்..
ராதா : என்ன உளர்றிங்க..
பாலன் : நீ அன்னைக்கு சொன்னதை.. இன்ஸ்பெக்டருகிட்ட சொல்லிட்டேன்..
ராதா : அது நான் ஏதோ ஆத்திரத்தில பேசனது.. அதுக்குன்னு நானே கொலை பண்ணதா ஆயிடுமா? என்னை யாரும் நம்ப மாட்டீங்களா?
அர்ஜுன் : ராதா.. மிஸ்டர் பாலன் கொடுத்த வாக்குமூலத்தின் படி.. மிஸ்டர் ரகுனாத் கொலை சம்பந்தமா.. உங்களை அரெஸ்ட் பண்றோம்..
ராதா : இன்ஸ்பெக்டர்.. ப்ளீஸ்.. என்னை நம்புங்க.. அவரை நான் கொலை பண்ணலை!
மரகதம் : எந்த கொலைகாரந்தான் தான் கொலை பண்ணதை ஒத்துக்குவான்..
அர்ஜுன் : இல்லைங்க ராதா.. இங்க இருக்கிற எல்லாரையும் விட.. மிஸ்டர் ரகுனாத்தோட சாவில உங்களுக்குத்தான் அதிக தொடர்பு இருக்கு.. மிஸ்டர் ரகுநாத் கவிதா என்ற பொண்ணு கூட தொடர்பு வைச்சிருக்கிறதா நீங்க தப்பா நினைச்சி.. அவசரப் பட்டிருக்கீங்க.. ரெண்டாவது.. அவரு உங்களையும் ஷங்கரையும் தப்பா பேசறதை உங்களால பொறுத்துக்க முடியலை.. அந்த கோவம் வேற.. மூனாவது.. ரகுநாத்.. மத்தவங்களுக்கு ஒரு நல்ல மனுஷனா இருந்திருந்தாலும்.. உங்களை கொடுமை படுத்தி இருக்காரு.. அதுல ஏற்பட்ட விரக்தி.. இது எல்லாம் சேர்ந்து உங்களைதான் குற்றவாளியா காட்டுது.. நிச்சயமா இந்த கொலையை நீங்கதான் பண்ணி இருக்கனும்!
(ராஜன் அங்கே வருகிறான்)
ராஜன் : இல்லை! எங்க அண்ணி இந்த கொலையை செய்யலை!
மரகதம் : டேய்.. என்னடா நீ? திடீர்னு வந்து என்னத்தை உளர்றே?!
ராஜன் : நீங்க சும்மா இருங்கம்மா..
அர்ஜுன் : அதெப்படி ராஜன்.. அவுங்க பண்ணலைன்னு இவ்ளோ உறுதியா சொல்றிங்க? எல்லாரும் அவுங்களைதான் குற்றவாளியா காட்டுறங்க.. எல்லா சாட்சியும் அவங்களுக்கு எதிரா இருக்கு.. கொலை பண்ண இடத்திலை அவுங்கதான் இருந்திருக்காங்க..
ராஜன் : ஐய்யோ.. அவுங்க அந்த இடத்தில இல்லை..
அர்ஜுன் : அப்படின்னா..? நீங்க இருந்திங்களா?!
(EFX: Music..)
அர்ஜுன் : சொல்லுங்க ராஜன்.. என்ன நடந்திச்சி?
ராஜன் : ஆமாம்.. அன்னைக்கு நாந்தான் இருந்தேன்.. எங்க அண்ணன் என்னை வரச் சொல்லி இருந்தாரு.. அவரை பார்க்கிறதுக்காக போனேன்.. அங்க, அவரு எங்க அண்ணியை பத்தி தப்பா சொல்லி என்னை அவங்களை கண்காணிக்க சொன்னாரு! அது எனக்கு கோவத்தை மூட்டுச்சி..
எங்க அண்ணியைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்.. எவ்ளோ எடுத்து சொன்னேன்.. எங்க அண்ணன் கேட்கலை.. எங்களுக்குள்ளே வாக்குவாதம் முத்தி போச்சி.. அவரை ஆத்திரத்தில தள்ளி விட்டுட்டு.. நான் போயிட்டேன்.. அவ்வளவுதான் எனக்கு தெரியும்..
அர்ஜுன் : மீதியை நான் சொல்றேன்.. கீழே விழுந்த உங்க அண்ணனுக்கு.. தலையில அடி பட்டிருச்சி.. அதோட அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருச்சி.. post mortem ரிப்போர்ட் படி.. அவரோட சாவுக்கு காரணம்.. மாரடைப்புத்தான்.. நீங்க யாரும் அவரை கொலை பண்ணலை!
ஷங்கர் : அப்புறம் ஏன் எங்களை எல்லாம் கூட்டிகிட்டு வந்து தொல்லை பண்ணிங்க..
அர்ஜுன் : கோவிச்சிக்காதிங்க.. அதுக்கு பல காரணங்கள் இருக்கு..
முதலாவது.. ராதா மேல அவுங்க மாமியாருக்கு இருந்த சந்தேகத்தை போக்கனும்..
ரெண்டாவது.. ரகுநாத்துக்கும் கவிதாவுக்கும் இருந்தது கள்ளத்தொடர்பு இல்லேன்னு தெளிவு படுத்தனும்..
மூனாவது.. இன்சூரன்ஸ் பணத்துக்காக ராதாதான் கொலை பண்ணிட்டாங்கன்னு பாலனும் நினைச்சிக்கிட்டு இருக்காரு.. அது அப்படி இல்லைன்னு தெளிவு படுத்தனும்..
கடைசியா.. அன்னைக்கு அவருகூட சண்டை போட்டது யாருன்னு எனக்கு புரியாமலேயே இருந்திச்சி.. அதையும் தெரிஞ்சிக்கனும்.. இந்த எல்லா குழப்பத்துக்கும் விடை காணத்தான்.. ராதாவை குற்றவாளின்னு சொன்னேன்.. அதுக்கு நீங்க எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க..
மாமியார் : அம்மாடி ராதா.. என்னையும் மன்னிச்சிரும்மா..
ராதா : யாரும் யாரையும் மன்னிக்க வேணாம் அத்தை.. நடந்ததையெல்லாம் மறந்திட்டு.. இனிமேலயாவது சந்தோஷமா இருப்போம்.. வாங்க எல்லாரும் நம்ம வீட்டுக்கு போகலாம்..
காசி : கிள்ளாடி சார் நீங்க.. எல்லாத்தையும் தெரிஞ்சிகிட்டு என் கிட்ட கூட சொல்லாம மறைச்சிட்டிங்களே சார்.. குற்றவாளி யாருன்னு கேட்டு கேட்டு என் பொண்டாட்டி என்னை தூங்கவே விடலை சார்!
(அனைவரும் சிரிக்கின்றனர்)
..சுபம்..
தமிழோடு வாழ்பவன்..
Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts
Tuesday, June 16, 2009
Monday, June 15, 2009
யார் குற்றவாளி..? (பகுதி 7 & 8)
காட்சி: 7.
நடிகர்கள் 1. ராதா 2. ஷங்கர்
(ஷங்கர் வீட்டிற்கு வருகிறான்..)
ராதா : வா ஷங்கர்..
ஷங்கர் : என்ன ராதா.. என்னென்னமோ கேள்விப்பட்டேன்.. ஒரு வாரம் நான் ஊர்ல இல்லை.. அதுக்குள்ளே என்னென்னமோ நடந்திருச்சே..
ராதா : நடந்தது என்னவோ நடந்திருச்சி.. ஆனா எல்லாரு சந்தேகமும் என் மேல இல்லை விழுந்திருக்கு.. என்னை மாட்டிவிட என் மாமியாரு மட்டும் போதும் போல இருக்கு!
ஷங்கர் : அவரு உனக்கு பண்ண கொடுமைக்கு.. கடவுளா பார்த்து கொடுத்த தண்டனைன்னு எடுத்துக்க வேண்டியதுதான்..
ராதா : எதுக்கும் நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இரு.. போலீஸ்காரங்க எந்த நேரத்திலயும் உன்னை வந்து விசாரிக்கலாம்!
ஷங்கர் : அதெல்லாம் காலையிலயே வந்துட்டாங்க..
ராதா : வந்தாங்களா? என்ன கேட்டாங்க?
ஷங்கர் : வேற என்ன கேப்பாங்க.. உன் மாமியாருதான் உனக்கும் எனக்கும் தொடர்பு இருக்குன்னு வாய்க்கூசாம சொல்லி வைச்சிருக்காங்களே!
ராதா : அது அவுங்க தப்பில்லே! இந்த மனுசன் சாகரதுக்கு முன்னாடி அவுங்ககிட்ட அப்படி சொல்லி அழுது இருக்காரு! அதனாலதான் இந்த கொலைக்கும் எனக்கும் தொடர்பு இருக்குன்னு அவுங்க நினைக்கிறாங்க..
நல்ல வேளை.. நீ ஊர்ல இல்லாம இருந்தே.. இல்லேன்னா.. இன்னேரம் உன்னை தூக்கி உள்ளே வைச்சிருப்பாங்க..
ஷங்கர் : கூடிய சீக்கிரத்தில வைச்சிருவாங்கன்னு நினைக்கிறேன்..
ராதா : என்ன ஷங்கர்? ஏன் அப்படி சொல்றீங்க?
ஷங்கர் : ராதா.. உண்மையை சொல்லு.. என்ன நடந்திச்சி?
ராதா : ஷங்கர்? நீங்களுமா என்னை சந்தேகப் படறிங்க?
ஷங்கர் : எனக்கு வேற வழி தெரியலை.. என்னை நான் காப்பாத்தி ஆகனும்.. என்ன நடந்திச்சின்னு தெரிஞ்சாகனும்.. ராதா : ஹ¤ம்.. அவரை கொன்னது யாருன்னு தெரிஞ்சா.. அவங்களுக்கு ஆறடிக்கு ஒரு மாலையை வாங்கிப் போடுவேன்.. என்னை இந்த கொஞ்ச நாளா எப்படி எல்லாம் சித்ரவதை செஞ்சாரு தெரியுமா? உனக்கும் எனக்கும் தொடர்பு இருக்குன்னு சொல்லி.. எத்தனை நாள் என்னை கொடுமை படுத்தினாருன்னு தெரியுமா?!
ஷங்கர் : நீ செய்யலைன்னா.. வேற யாரு? அவருக்கு பிஸினஸ்ல எதிரிங்க யாராவது?
ராதா : அவரோட பிஸினசை பத்தி நான் கேட்டதே இல்லை.. அவரும் என்கிட்ட எதையும் சொன்னதில்லை... இதைச் சொன்னா.. போலீஸ்காரங்க என்னை ஒரு மாதிரியா பார்க்கிறாங்க! எனக்கு தெரிஞ்சு.. அவருக்கு இருந்த ஒரே தொடர்பு.. அந்த கவிதா தான்.. அதைப் பத்தி கேக்க போயிதான் எங்களுக்குள்ளே இவ்வளவு விரிசல் ஏற்பட்டுச்சி!
ஷங்கர் : இன்னேரம் அவளையும் விசாரிச்சிருப்பாங்க..?
ராதா : என்ன சொல்றிங்க? உங்களையும் என்னையும் தவிர.. இந்த விஷயம் வேற யாருக்கும் தெரியாது.. போலீஸ்காரங்க கேட்டப்போ கூட நான் சொல்லலையே!
ஷங்கர் : நான் சொல்லீட்டேன்..
ராதா : சொல்லீட்டிங்களா?! தப்பு பண்னீட்டிங்க ஷங்கர்.. தப்பு பண்ணீட்டிங்க!
ஷங்கர் : என்னை காப்பாத்திக்க எனக்கு வேற வழி தெரியலை! அதான் பயத்தில ஏதோ உளறி கொட்டீட்டேன்..
ராதா : ஐய்யோ! அதனால நமக்கு நன்மை எதுவும் இல்லை! அந்த கவிதாவை விசாரிச்சா.. அப்புறம் போலீஸ்காரங்க கவனமெல்லாம் மறுபடியும் என் பக்கம்தான் திரும்பும்!
ஷங்கர் : என்ன சொல்ற ராதா? எனக்கு ஒன்னுமே புரியலை!ராதா : ஷங்கர்.. உங்க கவிதா எதுக்காக என் புருஷனை கொல்லனும்? அதனால அவளுக்கு என்ன லாபம்? அவரு இருக்கிற வரைக்கும் அவளுக்கு பணம் கொடுத்து உதவினாரு.. இறந்திட்டா? அவளுக்கு என்ன பங்கா கிடைக்கப் போவுது? எந்த லாபமும் இல்லாம.. எதுக்கு அவ அவரை கொல்லப் போறா? அதனாலதான் அவளைப்பத்தி நான் வாயே திறக்கலை.. தங்க முட்டை இடுர வாத்தை யாராவது அறுப்பாங்களா?
ராதா : சரி சரி.. இனி நீ இங்க தங்கினா ரெண்டு பேருக்கும் ஆபத்து.. முதல்ல இடத்தை காலி பண்ணு!
காட்சி: 8.
நடிகர்கள் 1. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் 2. கான்ஸ்டபிள் காசி
(காசி பேப்பரில் சில பெயர்களை எழுதி சுருட்டி எடுத்து வருகிறான்..)
காசி : சார்.. இதில ஒரு சீட்டை எடுங்க சார்!
அர்ஜுன் : என்னையா இது?
காசி : முடியலை சார்.. இதுக்கு மேலயும் இந்த கேஸ¤க்காக என்னால அலைய முடியலை சார்.. அதான் எல்லாரு பேரையும் எழுதி எடுத்துகிட்டு வந்திருக்கேன்.. நீங்க யாரு பேரை எடுக்கிறிங்களோ.. அவுங்க மேல கேஸை போட்டு உள்ளே தூக்கி போட்டுரலாம் சார்..
அர்ஜுன் : ஏன்.. அதையும் நீயே எடுக்க வேண்டியதுதானே!
காசி : ஹிஹி.. எடுத்துப் பார்த்தேன்.. செத்துப்போன ரகுனாத் பெயர் வந்திச்சி சார்.. அதான் கடுப்பாயி உங்க கிட்ட எடுத்திட்டு வந்தேன்..
அர்ஜுன் : நீ எதைத்தான் உருப்படியா செய்யிற..
காசி : அப்படின்னா.. நீங்க கண்டுபிடிக்க வேண்டியதுதானே சார்..
அர்ஜுன் : கண்டு பிடிச்சாச்சி..
காசி : எது.. கண்டு பிடிச்சாச்சா? யாரு சார்?
அர்ஜுன் : சொல்றேன் வா.. முதல்ல ராதா வீட்டுக்கு போவோம்..
காசி : அது வரைக்கும் தாங்காது சார்..
(தொடரும்..)
நடிகர்கள் 1. ராதா 2. ஷங்கர்
(ஷங்கர் வீட்டிற்கு வருகிறான்..)
ராதா : வா ஷங்கர்..
ஷங்கர் : என்ன ராதா.. என்னென்னமோ கேள்விப்பட்டேன்.. ஒரு வாரம் நான் ஊர்ல இல்லை.. அதுக்குள்ளே என்னென்னமோ நடந்திருச்சே..
ராதா : நடந்தது என்னவோ நடந்திருச்சி.. ஆனா எல்லாரு சந்தேகமும் என் மேல இல்லை விழுந்திருக்கு.. என்னை மாட்டிவிட என் மாமியாரு மட்டும் போதும் போல இருக்கு!
ஷங்கர் : அவரு உனக்கு பண்ண கொடுமைக்கு.. கடவுளா பார்த்து கொடுத்த தண்டனைன்னு எடுத்துக்க வேண்டியதுதான்..
ராதா : எதுக்கும் நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இரு.. போலீஸ்காரங்க எந்த நேரத்திலயும் உன்னை வந்து விசாரிக்கலாம்!
ஷங்கர் : அதெல்லாம் காலையிலயே வந்துட்டாங்க..
ராதா : வந்தாங்களா? என்ன கேட்டாங்க?
ஷங்கர் : வேற என்ன கேப்பாங்க.. உன் மாமியாருதான் உனக்கும் எனக்கும் தொடர்பு இருக்குன்னு வாய்க்கூசாம சொல்லி வைச்சிருக்காங்களே!
ராதா : அது அவுங்க தப்பில்லே! இந்த மனுசன் சாகரதுக்கு முன்னாடி அவுங்ககிட்ட அப்படி சொல்லி அழுது இருக்காரு! அதனாலதான் இந்த கொலைக்கும் எனக்கும் தொடர்பு இருக்குன்னு அவுங்க நினைக்கிறாங்க..
நல்ல வேளை.. நீ ஊர்ல இல்லாம இருந்தே.. இல்லேன்னா.. இன்னேரம் உன்னை தூக்கி உள்ளே வைச்சிருப்பாங்க..
ஷங்கர் : கூடிய சீக்கிரத்தில வைச்சிருவாங்கன்னு நினைக்கிறேன்..
ராதா : என்ன ஷங்கர்? ஏன் அப்படி சொல்றீங்க?
ஷங்கர் : ராதா.. உண்மையை சொல்லு.. என்ன நடந்திச்சி?
ராதா : ஷங்கர்? நீங்களுமா என்னை சந்தேகப் படறிங்க?
ஷங்கர் : எனக்கு வேற வழி தெரியலை.. என்னை நான் காப்பாத்தி ஆகனும்.. என்ன நடந்திச்சின்னு தெரிஞ்சாகனும்.. ராதா : ஹ¤ம்.. அவரை கொன்னது யாருன்னு தெரிஞ்சா.. அவங்களுக்கு ஆறடிக்கு ஒரு மாலையை வாங்கிப் போடுவேன்.. என்னை இந்த கொஞ்ச நாளா எப்படி எல்லாம் சித்ரவதை செஞ்சாரு தெரியுமா? உனக்கும் எனக்கும் தொடர்பு இருக்குன்னு சொல்லி.. எத்தனை நாள் என்னை கொடுமை படுத்தினாருன்னு தெரியுமா?!
ஷங்கர் : நீ செய்யலைன்னா.. வேற யாரு? அவருக்கு பிஸினஸ்ல எதிரிங்க யாராவது?
ராதா : அவரோட பிஸினசை பத்தி நான் கேட்டதே இல்லை.. அவரும் என்கிட்ட எதையும் சொன்னதில்லை... இதைச் சொன்னா.. போலீஸ்காரங்க என்னை ஒரு மாதிரியா பார்க்கிறாங்க! எனக்கு தெரிஞ்சு.. அவருக்கு இருந்த ஒரே தொடர்பு.. அந்த கவிதா தான்.. அதைப் பத்தி கேக்க போயிதான் எங்களுக்குள்ளே இவ்வளவு விரிசல் ஏற்பட்டுச்சி!
ஷங்கர் : இன்னேரம் அவளையும் விசாரிச்சிருப்பாங்க..?
ராதா : என்ன சொல்றிங்க? உங்களையும் என்னையும் தவிர.. இந்த விஷயம் வேற யாருக்கும் தெரியாது.. போலீஸ்காரங்க கேட்டப்போ கூட நான் சொல்லலையே!
ஷங்கர் : நான் சொல்லீட்டேன்..
ராதா : சொல்லீட்டிங்களா?! தப்பு பண்னீட்டிங்க ஷங்கர்.. தப்பு பண்ணீட்டிங்க!
ஷங்கர் : என்னை காப்பாத்திக்க எனக்கு வேற வழி தெரியலை! அதான் பயத்தில ஏதோ உளறி கொட்டீட்டேன்..
ராதா : ஐய்யோ! அதனால நமக்கு நன்மை எதுவும் இல்லை! அந்த கவிதாவை விசாரிச்சா.. அப்புறம் போலீஸ்காரங்க கவனமெல்லாம் மறுபடியும் என் பக்கம்தான் திரும்பும்!
ஷங்கர் : என்ன சொல்ற ராதா? எனக்கு ஒன்னுமே புரியலை!ராதா : ஷங்கர்.. உங்க கவிதா எதுக்காக என் புருஷனை கொல்லனும்? அதனால அவளுக்கு என்ன லாபம்? அவரு இருக்கிற வரைக்கும் அவளுக்கு பணம் கொடுத்து உதவினாரு.. இறந்திட்டா? அவளுக்கு என்ன பங்கா கிடைக்கப் போவுது? எந்த லாபமும் இல்லாம.. எதுக்கு அவ அவரை கொல்லப் போறா? அதனாலதான் அவளைப்பத்தி நான் வாயே திறக்கலை.. தங்க முட்டை இடுர வாத்தை யாராவது அறுப்பாங்களா?
ராதா : சரி சரி.. இனி நீ இங்க தங்கினா ரெண்டு பேருக்கும் ஆபத்து.. முதல்ல இடத்தை காலி பண்ணு!
காட்சி: 8.
நடிகர்கள் 1. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் 2. கான்ஸ்டபிள் காசி
(காசி பேப்பரில் சில பெயர்களை எழுதி சுருட்டி எடுத்து வருகிறான்..)
காசி : சார்.. இதில ஒரு சீட்டை எடுங்க சார்!
அர்ஜுன் : என்னையா இது?
காசி : முடியலை சார்.. இதுக்கு மேலயும் இந்த கேஸ¤க்காக என்னால அலைய முடியலை சார்.. அதான் எல்லாரு பேரையும் எழுதி எடுத்துகிட்டு வந்திருக்கேன்.. நீங்க யாரு பேரை எடுக்கிறிங்களோ.. அவுங்க மேல கேஸை போட்டு உள்ளே தூக்கி போட்டுரலாம் சார்..
அர்ஜுன் : ஏன்.. அதையும் நீயே எடுக்க வேண்டியதுதானே!
காசி : ஹிஹி.. எடுத்துப் பார்த்தேன்.. செத்துப்போன ரகுனாத் பெயர் வந்திச்சி சார்.. அதான் கடுப்பாயி உங்க கிட்ட எடுத்திட்டு வந்தேன்..
அர்ஜுன் : நீ எதைத்தான் உருப்படியா செய்யிற..
காசி : அப்படின்னா.. நீங்க கண்டுபிடிக்க வேண்டியதுதானே சார்..
அர்ஜுன் : கண்டு பிடிச்சாச்சி..
காசி : எது.. கண்டு பிடிச்சாச்சா? யாரு சார்?
அர்ஜுன் : சொல்றேன் வா.. முதல்ல ராதா வீட்டுக்கு போவோம்..
காசி : அது வரைக்கும் தாங்காது சார்..
(தொடரும்..)
குறிச்சொற்கள்
சிறுகதை
Thursday, June 11, 2009
யார் குற்றவாளி..?? (பகுதி 5 & 6)
காட்சி: 5.
நடிகர்கள் 1. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் 2. கான்ஸ்டபிள் காசி 3. ஷங்கர்
( இன்ஸ்பெக்டர் அர்ஜுன் காசியுடன் ஷங்கரின் அலுவலகத்திற்கு செல்கின்றனர்.)
(EFX : knock.. knock..)
அர்ஜுன் : மிஸ்டர் ஷங்கர்..
ஷங்கர் : ஆமாம்.. நீங்க..
காசி : சார்தான் இன்ஸ்பெக்டர் அர்ஜுன்.. நீங்க தங்கி இருக்கிற வீட்டுக்கு சொந்தக்காரர்..
மிஸ்டர் ரகுனாத்.. கொலை செய்யப் பட்டிருக்காரு.. தெரியுமா? அந்த கேஸை சார்கிட்டதான் கொடுத்திருக்காங்க..
ஷங்கர் : (ஆச்சரியமாக) கொலை செய்யப் பட்டாரா?
காசி : ஆமாம்.. எதுவுமே தெரியாத மாதிரி கேக்குறிங்க.. நீங்க அங்க தான தங்கி இருக்கிறிங்க?
அர்ஜுன் : மிஸ்டர் ஷங்கர்.. கடந்த வெள்ளிக்கிழமை சாயந்திரம் 3.00 மணியில இருந்து 5.00 மணி வரைக்கும் எங்க இருந்திங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?
ஷங்கர் : இன்ஸ்பெக்டர்.. நான் என் ஆபீஸ் விசயமா ஜோகூர் பாருவுக்கு போயிட்டு இன்னைக்கு காலையிலதான் திரும்பி வந்தேன்.. வீட்டுக்கு போகக் கூட நேரம் இல்லாம நேரா வேலைக்கு வந்திட்டேன்..
அர்ஜுன் : ம்ம்.. அப்போ.. இங்கே நடந்தது எதுவுமே உங்களுக்கு தெரியாதுன்னு சொல்றீங்க?
ஷங்கர் : நிச்சயமா தெரியாது..
அர்ஜுன் : ம்ம்.. சரி.. JB-யில எந்த ஹோட்டல்ல தங்கி இருந்திங்க? ரசீது இருக்கா..
ஷங்கர் : அது.. வந்து..
காசி : அதான் இவ்ளோ தூரம் வந்திட்டிங்களே.. முதல்ல ரசீதை காட்டுங்க..
ஷங்கர் : நான் ஹோட்டல்ல தங்கி இருக்கலை.. என்னோட நண்பர் ஒருத்தரோட வீட்டில தங்கி இருந்தேன்..
காசி : கவனிச்சிங்களா.. நண்பராம்! ஆம்பிளை நண்பரா...? இல்லை.. ஹஹஹ.. பொம்பளை நண்பரா??
ஷங்கர் : இங்க பாருங்க இன்ஸ்பெக்டர்.. இந்த மாதிரி அநாகரிகமா விசாரனை செய்யிறதா இருந்தா.. எனக்கு warrant அனுப்புங்க.. நானே நேர்ல வந்து பதில் சொல்றன்.. இப்போ நீங்க போகலாம்..
அர்ஜுன் : ம்ம்.. ஆக.. சட்டப்படி வரச்சொல்றீங்க.. ஏற்கெனவே உங்க மேல மிஸ்டர் ரகுனாத் அவுங்க அம்மா புகார் கொடுத்திருக்காங்க..
ஷங்கர் : என் மேலயா? என்னன்னு?
காசி : அதை அவரு சொல்ல மாட்டாரு! நான் தான் சொல்லனும்.. அதாவது.. உங்களுக்கும்.. திருமதி ராதா ரகுனாத்துக்கும் ஒரு மாதிரியான கசமுசா தொடர்பு இருக்கு.. அது ரகுனாத்துக்குக்கு தெரிஞ்சதும்.. அவரை நீங்க ரெண்டு பேரும் திட்டம் போட்டு தீர்த்துக் கட்டீட்டிங்கன்னு..
அர்ஜுன் : நாங்க நினைச்சா.. அந்த புகாரை வச்சி.. உங்களை அரெஸ்ட் பண்ணி உங்களை எங்க பாணியில விசாரனை பண்ண முடியும்.. ஆனா.. நீங்க ஒரு நல்ல கம்பெனியில வேலை செய்யிறிங்க.. அதை அனாவசியமா கெடுக்கக் கூடாதுன்னுதான் நாங்க கூட போலீஸ் உடையில வராம.. சாதாரண உடையில வந்திருக்கோம்.. சொல்லுங்க.. உங்களுக்கு நாங்க சட்டப்படி வரணும்னா.. அதுக்கும் நாங்க ரெடி..
காசி : சொல்லுங்க சார்.. உங்களுக்கும் அந்த ராதா மேடத்துக்கும் என்ன சம்பந்தம்.. அவுங்க மாமியார் சொல்ற மாதிரி ஏதாவது..
ஷங்கர் : ஐய்யய்யோ! அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை! நான் அவுங்க வீட்டுல தங்கி இருக்கேன்.. ராதாவுக்கு நான் தூரத்து சொந்தம்..
அர்ஜுன் : சொந்தம்னா..
ஷங்கர் : எனக்கு அவுங்க அத்தை பொன்னு!
காசி : அப்போ அவுங்க சொன்னது சரிதான்!!
அர்ஜுன் : ஸ்ஸ்ஸ்.. சொல்லுங்க..
ஷங்கர் : நாங்க ரெண்டு பேரும் சாதாரணமாத்தான் பழகறோம்.. ந்£ங்க நினைக்கிற மாதிரி ஏதும் இல்லை..
அர்ஜுன் : நாங்க நினைக்கலை.. எல்லாரும் சொல்றாங்க..
ஷங்கர் : சார்.. இதுல எனக்கு எந்த தொடர்பும் இல்லை.. ராதா எங்கிட்ட நல்லா பழகுவாங்க.. ஆரம்பத்துல நான் தனியாதான் ஒரு அறையில தங்கி இருந்தேன்.. எதேச்சையா என்னை பார்த்த ராதாதான் அவுங்க வீட்டுல வந்து தங்கிக்க சொன்னா..
அர்ஜுன் : உங்களுக்கும் ரகுனாத்துக்கும் ஏதாவது சண்டை.. கருத்து வேறுபாடு.. ஏதாவது..
ஷங்கர் : அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை.. அவரை நான் பாக்கிறதே ரொம்ப குறைவு..
காசி : ஆமாம்.. ஆமாம்.. அதுக்கெல்லாம் உங்களுக்கு எங்க நேரம் இருந்திருக்கும்..
அர்ஜுன் : சரி.. இந்த கொலையில உங்களுக்கு யாரு மேலயாவது சந்தேகம் இருக்கா?
ஷங்கர் : ம்ம்.. சந்தேகம்னா.. ரகுனாத்துக்கு கவிதாங்கிற ஒரு விதவைக்கும் தொடர்பு இருக்கிறதா ராதா என்கிட்ட சொல்லி இருக்கா..
அர்ஜுன் : ம்ம்.. கவிதா!!
காட்சி: 6
நடிகர்கள் 1. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் 2. கான்ஸ்டபிள் காசி
(அர்ஜுனும் காசியும் கவிதாவை விசாரணை செய்துவிட்டு வருகின்றனர்..)
காசி : என்ன சார் இது? இவுங்க இப்படி சொல்றாங்க? நாம ஒன்னு நினைச்சா.. இப்போ கதை எப்படி எப்படியோ போவுதே!
அர்ஜுன் : யாரை நம்புறதுன்னு எனக்கும் தெரியலை.. ஆனா.. இந்த கவிதாவுக்கு கொலையில தொடர்பு இருக்கிற மாதிரி தோணலை..
காசி : ஏன் சார்.. இந்த இங்கிலீஷ் படத்தில வர்ற மாதிரி.. அவரோட இன்சூரன்ஸ் பணத்துக்கு ஆசைப்பட்டு ராதாவே அவரை கொன்னுட்டாங்களோ?!
அர்ஜுன் : பரவாயில்லையே.. ரொம்ப நாளைக்கு பிறகு உன் புத்தி கொஞ்சம் வேலை செய்யுதே!
காசி : அப்போ உடனே அவரு என்னென்ன இன்சூரன்ஸ் எடுத்திருக்காருன்னு செக் பண்ணிருவோம் சார்..
அர்ஜுன் : அதை நான் ஏற்கெனவே செஞ்சிட்டேன்.. ரகுனாத்.. தன் பேருல பெரிய அளவில இன்சூரன்ஸ் பண்ணி இருக்காரு.. அவரு கொலை செய்யப் படுறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி.. 2 மில்லியனுக்கு ஒரு பாலிசி எடுத்திருக்காரு!
காசி : சார்.. அந்த பாலிசிக்கு யார் சார் வாரிசு?!
அர்ஜுன் : அவரு எந்த ஒரு உயிலும் எழுதலை.. இன்சூரன்ஸ் கம்பெனியிலயும் வாரிசு யாரையும் நியமனம் பண்ணலை.. அதனால பெரும் பகுதி தொகை.. ராதாவுக்குத் தான் போகும்..
காசி : அப்புறம் என்ன சார்.. இதை விட இந்த கொலைக்கு வேற என்ன motif வேணும்..
அர்ஜுன் : அவசரப் படாதைய்யா... முதல்ல.. போயி அந்த டாக்டரை பார்த்து விசாரிக்கலாம்.. post mortem ரிப்போர்ட்டு என்ன சொல்லுதுன்னு பார்த்திட்டு.. பிறகு முடிவு பண்ணலாம்!
(தொடரும்..)
நடிகர்கள் 1. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் 2. கான்ஸ்டபிள் காசி 3. ஷங்கர்
( இன்ஸ்பெக்டர் அர்ஜுன் காசியுடன் ஷங்கரின் அலுவலகத்திற்கு செல்கின்றனர்.)
(EFX : knock.. knock..)
அர்ஜுன் : மிஸ்டர் ஷங்கர்..
ஷங்கர் : ஆமாம்.. நீங்க..
காசி : சார்தான் இன்ஸ்பெக்டர் அர்ஜுன்.. நீங்க தங்கி இருக்கிற வீட்டுக்கு சொந்தக்காரர்..
மிஸ்டர் ரகுனாத்.. கொலை செய்யப் பட்டிருக்காரு.. தெரியுமா? அந்த கேஸை சார்கிட்டதான் கொடுத்திருக்காங்க..
ஷங்கர் : (ஆச்சரியமாக) கொலை செய்யப் பட்டாரா?
காசி : ஆமாம்.. எதுவுமே தெரியாத மாதிரி கேக்குறிங்க.. நீங்க அங்க தான தங்கி இருக்கிறிங்க?
அர்ஜுன் : மிஸ்டர் ஷங்கர்.. கடந்த வெள்ளிக்கிழமை சாயந்திரம் 3.00 மணியில இருந்து 5.00 மணி வரைக்கும் எங்க இருந்திங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?
ஷங்கர் : இன்ஸ்பெக்டர்.. நான் என் ஆபீஸ் விசயமா ஜோகூர் பாருவுக்கு போயிட்டு இன்னைக்கு காலையிலதான் திரும்பி வந்தேன்.. வீட்டுக்கு போகக் கூட நேரம் இல்லாம நேரா வேலைக்கு வந்திட்டேன்..
அர்ஜுன் : ம்ம்.. அப்போ.. இங்கே நடந்தது எதுவுமே உங்களுக்கு தெரியாதுன்னு சொல்றீங்க?
ஷங்கர் : நிச்சயமா தெரியாது..
அர்ஜுன் : ம்ம்.. சரி.. JB-யில எந்த ஹோட்டல்ல தங்கி இருந்திங்க? ரசீது இருக்கா..
ஷங்கர் : அது.. வந்து..
காசி : அதான் இவ்ளோ தூரம் வந்திட்டிங்களே.. முதல்ல ரசீதை காட்டுங்க..
ஷங்கர் : நான் ஹோட்டல்ல தங்கி இருக்கலை.. என்னோட நண்பர் ஒருத்தரோட வீட்டில தங்கி இருந்தேன்..
காசி : கவனிச்சிங்களா.. நண்பராம்! ஆம்பிளை நண்பரா...? இல்லை.. ஹஹஹ.. பொம்பளை நண்பரா??
ஷங்கர் : இங்க பாருங்க இன்ஸ்பெக்டர்.. இந்த மாதிரி அநாகரிகமா விசாரனை செய்யிறதா இருந்தா.. எனக்கு warrant அனுப்புங்க.. நானே நேர்ல வந்து பதில் சொல்றன்.. இப்போ நீங்க போகலாம்..
அர்ஜுன் : ம்ம்.. ஆக.. சட்டப்படி வரச்சொல்றீங்க.. ஏற்கெனவே உங்க மேல மிஸ்டர் ரகுனாத் அவுங்க அம்மா புகார் கொடுத்திருக்காங்க..
ஷங்கர் : என் மேலயா? என்னன்னு?
காசி : அதை அவரு சொல்ல மாட்டாரு! நான் தான் சொல்லனும்.. அதாவது.. உங்களுக்கும்.. திருமதி ராதா ரகுனாத்துக்கும் ஒரு மாதிரியான கசமுசா தொடர்பு இருக்கு.. அது ரகுனாத்துக்குக்கு தெரிஞ்சதும்.. அவரை நீங்க ரெண்டு பேரும் திட்டம் போட்டு தீர்த்துக் கட்டீட்டிங்கன்னு..
அர்ஜுன் : நாங்க நினைச்சா.. அந்த புகாரை வச்சி.. உங்களை அரெஸ்ட் பண்ணி உங்களை எங்க பாணியில விசாரனை பண்ண முடியும்.. ஆனா.. நீங்க ஒரு நல்ல கம்பெனியில வேலை செய்யிறிங்க.. அதை அனாவசியமா கெடுக்கக் கூடாதுன்னுதான் நாங்க கூட போலீஸ் உடையில வராம.. சாதாரண உடையில வந்திருக்கோம்.. சொல்லுங்க.. உங்களுக்கு நாங்க சட்டப்படி வரணும்னா.. அதுக்கும் நாங்க ரெடி..
காசி : சொல்லுங்க சார்.. உங்களுக்கும் அந்த ராதா மேடத்துக்கும் என்ன சம்பந்தம்.. அவுங்க மாமியார் சொல்ற மாதிரி ஏதாவது..
ஷங்கர் : ஐய்யய்யோ! அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை! நான் அவுங்க வீட்டுல தங்கி இருக்கேன்.. ராதாவுக்கு நான் தூரத்து சொந்தம்..
அர்ஜுன் : சொந்தம்னா..
ஷங்கர் : எனக்கு அவுங்க அத்தை பொன்னு!
காசி : அப்போ அவுங்க சொன்னது சரிதான்!!
அர்ஜுன் : ஸ்ஸ்ஸ்.. சொல்லுங்க..
ஷங்கர் : நாங்க ரெண்டு பேரும் சாதாரணமாத்தான் பழகறோம்.. ந்£ங்க நினைக்கிற மாதிரி ஏதும் இல்லை..
அர்ஜுன் : நாங்க நினைக்கலை.. எல்லாரும் சொல்றாங்க..
ஷங்கர் : சார்.. இதுல எனக்கு எந்த தொடர்பும் இல்லை.. ராதா எங்கிட்ட நல்லா பழகுவாங்க.. ஆரம்பத்துல நான் தனியாதான் ஒரு அறையில தங்கி இருந்தேன்.. எதேச்சையா என்னை பார்த்த ராதாதான் அவுங்க வீட்டுல வந்து தங்கிக்க சொன்னா..
அர்ஜுன் : உங்களுக்கும் ரகுனாத்துக்கும் ஏதாவது சண்டை.. கருத்து வேறுபாடு.. ஏதாவது..
ஷங்கர் : அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை.. அவரை நான் பாக்கிறதே ரொம்ப குறைவு..
காசி : ஆமாம்.. ஆமாம்.. அதுக்கெல்லாம் உங்களுக்கு எங்க நேரம் இருந்திருக்கும்..
அர்ஜுன் : சரி.. இந்த கொலையில உங்களுக்கு யாரு மேலயாவது சந்தேகம் இருக்கா?
ஷங்கர் : ம்ம்.. சந்தேகம்னா.. ரகுனாத்துக்கு கவிதாங்கிற ஒரு விதவைக்கும் தொடர்பு இருக்கிறதா ராதா என்கிட்ட சொல்லி இருக்கா..
அர்ஜுன் : ம்ம்.. கவிதா!!
காட்சி: 6
நடிகர்கள் 1. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் 2. கான்ஸ்டபிள் காசி
(அர்ஜுனும் காசியும் கவிதாவை விசாரணை செய்துவிட்டு வருகின்றனர்..)
காசி : என்ன சார் இது? இவுங்க இப்படி சொல்றாங்க? நாம ஒன்னு நினைச்சா.. இப்போ கதை எப்படி எப்படியோ போவுதே!
அர்ஜுன் : யாரை நம்புறதுன்னு எனக்கும் தெரியலை.. ஆனா.. இந்த கவிதாவுக்கு கொலையில தொடர்பு இருக்கிற மாதிரி தோணலை..
காசி : ஏன் சார்.. இந்த இங்கிலீஷ் படத்தில வர்ற மாதிரி.. அவரோட இன்சூரன்ஸ் பணத்துக்கு ஆசைப்பட்டு ராதாவே அவரை கொன்னுட்டாங்களோ?!
அர்ஜுன் : பரவாயில்லையே.. ரொம்ப நாளைக்கு பிறகு உன் புத்தி கொஞ்சம் வேலை செய்யுதே!
காசி : அப்போ உடனே அவரு என்னென்ன இன்சூரன்ஸ் எடுத்திருக்காருன்னு செக் பண்ணிருவோம் சார்..
அர்ஜுன் : அதை நான் ஏற்கெனவே செஞ்சிட்டேன்.. ரகுனாத்.. தன் பேருல பெரிய அளவில இன்சூரன்ஸ் பண்ணி இருக்காரு.. அவரு கொலை செய்யப் படுறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி.. 2 மில்லியனுக்கு ஒரு பாலிசி எடுத்திருக்காரு!
காசி : சார்.. அந்த பாலிசிக்கு யார் சார் வாரிசு?!
அர்ஜுன் : அவரு எந்த ஒரு உயிலும் எழுதலை.. இன்சூரன்ஸ் கம்பெனியிலயும் வாரிசு யாரையும் நியமனம் பண்ணலை.. அதனால பெரும் பகுதி தொகை.. ராதாவுக்குத் தான் போகும்..
காசி : அப்புறம் என்ன சார்.. இதை விட இந்த கொலைக்கு வேற என்ன motif வேணும்..
அர்ஜுன் : அவசரப் படாதைய்யா... முதல்ல.. போயி அந்த டாக்டரை பார்த்து விசாரிக்கலாம்.. post mortem ரிப்போர்ட்டு என்ன சொல்லுதுன்னு பார்த்திட்டு.. பிறகு முடிவு பண்ணலாம்!
(தொடரும்..)
குறிச்சொற்கள்
சிறுகதை
Wednesday, June 10, 2009
குற்றவாளி யார்..?? (பகுதி 3 & 4)
காட்சி: 3.
நடிகர்கள் 1. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் 2. கான்ஸ்டபள் காசி
(ராதாவின் வீட்டின் முன் சற்று தொலைவில் காரில் கான்ஸ்டபள் காசி தூங்கிக் கொண்டிருக்கிறார். அங்கே இன்ஸ்பெக்டர் அர்ஜுன் வருகிறார்.)
EFX : 1. குறட்டை சத்தம். 2. Car door opening sound
அர்ஜுன் : யோவ்.. காசி.. எழுந்திருய்யா..
காசி : அ.. குட் மார்னிங் சார்..
அர்ஜுன் : ஹ¤ம்.. உன்னை என்ன செய்ய சொல்லி இங்க அனுப்பினேன்..?
காசி : சார்.. அது வந்து.. ராதா மேடம் வீட்டுக்கு சந்தேகப் படும்படியா யாரும் வராங்களான்னு பார்க்க சொன்னீங்க சார்..
அர்ஜுன் : நீ என்ன பண்ணிகிட்டு இருக்கே?
காசி : சார்.. கோவிச்சிக்காதிங்க சார்.. நேத்து ராத்திரி வீட்டில இட்லிக்கு மாவாட்டினேன்.. அந்த அசதியில தூங்கிட்டேன் சார்..
அர்ஜுன் : ஏன்.. காலையிலேயே போய் இட்லியை செஞ்சு கொடுத்துட்டு வர வேண்டியதுதானே! காசி : அதுக்கு எதுக்கு சார் நான்.. அதை எங்க அப்பா கவனிச்சிக்குவாரு..
அர்ஜுன் : ஹ¤ம்.. நல்ல குடும்பம்! சரி சரி.. ராத்திரி யாராவது வந்தாங்களா?
காசி : அப்படி யாரும் வந்ததா தெரியலை சார்..
அர்ஜுன் : எப்படி தெரியும்? கண்ணை தொறந்து வைச்சிருந்தாதானே எதுவும் தெரியறதுக்கு! சரி சரி வா.. கிளம்புவோம்.. நிறைய வேலை இருக்கு!
(EFX : Car ignition.. Car moves)
காட்சி: 4.
நடிகர்கள் 1. ராதா 2. பாலன்
( ராதா தன் நண்பன் பாலனுக்கு போன் செய்கிறாள்.)
(EFX : Telephone)
பாலன் : ஹலோ..
ராதா : ஹலோ.. பாலன்.. நான் ராதா பேசறேன்..
பாலன் : எல்லாத்தையும் கேள்விப் பட்டேன்.. ஆனா.. காரியத்துக்கு என்னால வர முடியலை.. என்னை மன்னிச்சிரு ராதா..
ராதா : எல்லா காரியத்தையும் பண்ணீட்டு.. காரியத்துக்கு வர முடியலைன்னு சொல்றியா?
பாலன் : என்ன ராதா உளர்றே? நான் என்ன பண்ணேன்..
ராதா : ஹ¤ம். அன்னைக்கு நான் ஏதோ ஆத்திரத்தில என் புருஷன் செத்தாலும் தேவலைன்னு சொன்னேன்.. அப்போ நீ என்னை பார்த்த பார்வை.. அவரை கொல்றதுக்காகத்தான்னு எனக்கு தெரியாம போச்சு!
பாலன் : விளையாடாதே ராதா.. நானாவது.. அவரைக் கொல்றதாதவது! உனக்கென்ன பைத்தியமா? ஆத்திரத்தில நீதான் உணர்ச்சி வசப்பட்டு அவரைக் கொன்னுட்டேன்னு நான் நினைச்சி வேதனைப் பட்டுகிட்டு இருக்கேன்..
ராதா : (கத்துகிறாள்) பாலன்..
பாலன் : ஆத்திரப்படாத்தே ராதா... உண்மையிலேயே என்ன நடந்திச்சின்னு என் கிட்ட சொல்லு.. எனக்கு தெரிஞ்ச நல்ல வக்கீல் ஒருத்தரு இருக்காரு.. எதுவா இருந்தாலும் அவரு பார்த்துக்குவாரு.. நீ எதுக்கும் கவலைப்படாதே!
ராதா : நீங்க சொல்றதைப் பார்த்தா என்னமோ அவரை நானே கொலை பண்ண மாதிரி இல்லை பேசறிங்க..
பாலன் : அதான உண்மை..?
ராதா : ஐய்யோ பாலன்.. நீங்களும் எங்க மாமியார் மாதிரி பேசாதிங்க.. ஏற்கெனவே போலீஸ்காரங்க அவுங்க பேச்சை கேட்டுகிட்டு என்னை சுத்தி சுத்தி வராங்க.. இதுல நீங்க வேற இப்படி யாரு கிட்டயும் சொல்லி வைக்காதிங்க..!
பாலன் : நீங்க பண்ணலைன்னா.. பிறகு யாரு பண்ணி இருப்பா?!
(தொடரும்..)
நடிகர்கள் 1. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் 2. கான்ஸ்டபள் காசி
(ராதாவின் வீட்டின் முன் சற்று தொலைவில் காரில் கான்ஸ்டபள் காசி தூங்கிக் கொண்டிருக்கிறார். அங்கே இன்ஸ்பெக்டர் அர்ஜுன் வருகிறார்.)
EFX : 1. குறட்டை சத்தம். 2. Car door opening sound
அர்ஜுன் : யோவ்.. காசி.. எழுந்திருய்யா..
காசி : அ.. குட் மார்னிங் சார்..
அர்ஜுன் : ஹ¤ம்.. உன்னை என்ன செய்ய சொல்லி இங்க அனுப்பினேன்..?
காசி : சார்.. அது வந்து.. ராதா மேடம் வீட்டுக்கு சந்தேகப் படும்படியா யாரும் வராங்களான்னு பார்க்க சொன்னீங்க சார்..
அர்ஜுன் : நீ என்ன பண்ணிகிட்டு இருக்கே?
காசி : சார்.. கோவிச்சிக்காதிங்க சார்.. நேத்து ராத்திரி வீட்டில இட்லிக்கு மாவாட்டினேன்.. அந்த அசதியில தூங்கிட்டேன் சார்..
அர்ஜுன் : ஏன்.. காலையிலேயே போய் இட்லியை செஞ்சு கொடுத்துட்டு வர வேண்டியதுதானே! காசி : அதுக்கு எதுக்கு சார் நான்.. அதை எங்க அப்பா கவனிச்சிக்குவாரு..
அர்ஜுன் : ஹ¤ம்.. நல்ல குடும்பம்! சரி சரி.. ராத்திரி யாராவது வந்தாங்களா?
காசி : அப்படி யாரும் வந்ததா தெரியலை சார்..
அர்ஜுன் : எப்படி தெரியும்? கண்ணை தொறந்து வைச்சிருந்தாதானே எதுவும் தெரியறதுக்கு! சரி சரி வா.. கிளம்புவோம்.. நிறைய வேலை இருக்கு!
(EFX : Car ignition.. Car moves)
காட்சி: 4.
நடிகர்கள் 1. ராதா 2. பாலன்
( ராதா தன் நண்பன் பாலனுக்கு போன் செய்கிறாள்.)
(EFX : Telephone)
பாலன் : ஹலோ..
ராதா : ஹலோ.. பாலன்.. நான் ராதா பேசறேன்..
பாலன் : எல்லாத்தையும் கேள்விப் பட்டேன்.. ஆனா.. காரியத்துக்கு என்னால வர முடியலை.. என்னை மன்னிச்சிரு ராதா..
ராதா : எல்லா காரியத்தையும் பண்ணீட்டு.. காரியத்துக்கு வர முடியலைன்னு சொல்றியா?
பாலன் : என்ன ராதா உளர்றே? நான் என்ன பண்ணேன்..
ராதா : ஹ¤ம். அன்னைக்கு நான் ஏதோ ஆத்திரத்தில என் புருஷன் செத்தாலும் தேவலைன்னு சொன்னேன்.. அப்போ நீ என்னை பார்த்த பார்வை.. அவரை கொல்றதுக்காகத்தான்னு எனக்கு தெரியாம போச்சு!
பாலன் : விளையாடாதே ராதா.. நானாவது.. அவரைக் கொல்றதாதவது! உனக்கென்ன பைத்தியமா? ஆத்திரத்தில நீதான் உணர்ச்சி வசப்பட்டு அவரைக் கொன்னுட்டேன்னு நான் நினைச்சி வேதனைப் பட்டுகிட்டு இருக்கேன்..
ராதா : (கத்துகிறாள்) பாலன்..
பாலன் : ஆத்திரப்படாத்தே ராதா... உண்மையிலேயே என்ன நடந்திச்சின்னு என் கிட்ட சொல்லு.. எனக்கு தெரிஞ்ச நல்ல வக்கீல் ஒருத்தரு இருக்காரு.. எதுவா இருந்தாலும் அவரு பார்த்துக்குவாரு.. நீ எதுக்கும் கவலைப்படாதே!
ராதா : நீங்க சொல்றதைப் பார்த்தா என்னமோ அவரை நானே கொலை பண்ண மாதிரி இல்லை பேசறிங்க..
பாலன் : அதான உண்மை..?
ராதா : ஐய்யோ பாலன்.. நீங்களும் எங்க மாமியார் மாதிரி பேசாதிங்க.. ஏற்கெனவே போலீஸ்காரங்க அவுங்க பேச்சை கேட்டுகிட்டு என்னை சுத்தி சுத்தி வராங்க.. இதுல நீங்க வேற இப்படி யாரு கிட்டயும் சொல்லி வைக்காதிங்க..!
பாலன் : நீங்க பண்ணலைன்னா.. பிறகு யாரு பண்ணி இருப்பா?!
(தொடரும்..)
குறிச்சொற்கள்
சிறுகதை
குற்றவாளி யார்..? (பகுதி 1 & 2)
காட்சி: 1.
நடிகர்கள் 1. மரகதம் 2. ராதா
(ராதாவின் கணவர் எதிர்பாராதவிதமாக அவரது அலுவலகத்தில் மரணமடைந்து விடுகிறார். ராதாதான் அவரை கொலை செய்துவிட்டாள் என்று அவளின் மாமியார்- மரகதம் அவளை கடிந்து கொள்கிறார்.)
மரகதம் : எனக்கு தெரியும்.. நல்லா இருந்த என் மகனை நீதாண்டி கொன்னுட்டே..! செய்யிறதெல்லாம் செஞ்சிட்டு.. ஒன்னும் தெரியாதவ மாதிரி நிக்கிறதை பாரு.. தப்பிச்சிரலாம்னு மட்டும் நினைக்காதே.. உன்னை சும்மா விட மாட்டேன்.. என் சின்ன மகன் ராஜன் வரட்டும்..
ராதா : உங்களுக்கு என்ன அத்தை வந்திச்சி..? நானே அவரு போன சோகத்தில இருக்கேன்.. என்னை ஏன் இப்படி சித்ரவதை செய்யிறிங்க..?
மரகதம் : சோகத்தில இருக்கியா?! இல்லை சந்தோஷமா இருக்கியான்னு இப்போ தெரிஞ்சிடும்.. போலீஸ்காரன் வந்து.. கேக்கிற விதத்தில கேட்டா.. எல்லா உண்மையும் வெளிய வந்திடும்.. என் மகன் உனக்கு அப்படி என்ன குறை வைச்சான்? காசு பணம் சேர்த்து வைக்கலையா? வீடு வாசல்னு கட்டிக் கொடுக்கலையா?
ராதா : அதெல்லாம் இருந்தா மட்டும் போதுமா? (EFX) ஏன் என் வாயை கிளர்றிங்க..
மரகதம் : பார்த்தியா.. உன் வாயாலயே உண்மை வருது..
ராதா : ஐய்யோ .. அத்தை.. கொஞ்சம் நிப்பாட்ரிங்களா.. இத்தனை நாள் உங்க மகனோட தொல்லை.. இப்ப உங்க தொல்லை!
(EFX : போலீஸ் வண்டி வரும் சத்தம்..)
மரகதம் : இப்போ தெரிஞ்சிரும்! போலீஸ்காரங்க வந்தா.. எல்லாம் தெரிஞ்சிரும்!
காட்சி : 2.
நடிகர்கள் 1. ராஜன் 2. மரகதம்
( ராஜன் அவன் அம்மாவிடம் சத்தம் போடுகிறான் )
ராஜன் : இப்போ உங்களுக்கு சந்தோஷமா? ஏம்மா நீங்க மட்டும் இப்படியெல்லாம் யோசிக்கிறிங்க.. அண்ணியை பார்த்தா கொலைகாரி மாதிரியா தெரியுது?
மரகதம் : நீ பேசாம இருடா.. உனக்கு ஒன்னும் தெரியாது.. அவதான் உங்க அண்ணனை கொன்னுட்டா.. இன்னும் கொஞ்ச நாள்ல உனக்கும்.. எல்லாருக்கும் உண்மை என்னான்னு தெரியத்தான் போகுது..
ராஜன் : அம்மா.. உண்மை என்னான்னு தெரியாம நாம இப்படி அவசரப் பட்டா.. பாதிக்கப் படப்போறது நாமதான்.. நம்ம குடும்ப கௌரவம்தான்.. இது ஏன் உங்களுக்கு புரிய மாட்டுது..
மரகதம் : யாரு அவசரப் படறாங்க.. நான் எதையும் பெரிசா எடுத்துக்காம இருந்ததாலதான் இப்போ என் மகனையே இழந்திட்டு நிக்கிறேன்.. அண்ணைக்கே உங்க அண்ணன் தலைப்பாடா அடிசிகிட்டான்..
ராஜன் : என்னம்மா சொல்றீங்க?
மரகதம் : டேய்.. ராஜா.. உங்க அண்ணி.. தப்பானவடா!
ராஜன் : அம்மா! என்னம்மா நீங்களே இப்படி சொல்றீங்க..
மரகதம் : இதை நான் சொல்லலை.. சாகறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி உங்க அண்ணன் அவனே எங்கிட்ட சொல்லி அழுதான்.. இந்த பாவி அதை பெரிசா எடுத்துக்காம அவனுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பிட்டேன்.. (அழுகிறாள்)
தொடரும்..
நடிகர்கள் 1. மரகதம் 2. ராதா
(ராதாவின் கணவர் எதிர்பாராதவிதமாக அவரது அலுவலகத்தில் மரணமடைந்து விடுகிறார். ராதாதான் அவரை கொலை செய்துவிட்டாள் என்று அவளின் மாமியார்- மரகதம் அவளை கடிந்து கொள்கிறார்.)
மரகதம் : எனக்கு தெரியும்.. நல்லா இருந்த என் மகனை நீதாண்டி கொன்னுட்டே..! செய்யிறதெல்லாம் செஞ்சிட்டு.. ஒன்னும் தெரியாதவ மாதிரி நிக்கிறதை பாரு.. தப்பிச்சிரலாம்னு மட்டும் நினைக்காதே.. உன்னை சும்மா விட மாட்டேன்.. என் சின்ன மகன் ராஜன் வரட்டும்..
ராதா : உங்களுக்கு என்ன அத்தை வந்திச்சி..? நானே அவரு போன சோகத்தில இருக்கேன்.. என்னை ஏன் இப்படி சித்ரவதை செய்யிறிங்க..?
மரகதம் : சோகத்தில இருக்கியா?! இல்லை சந்தோஷமா இருக்கியான்னு இப்போ தெரிஞ்சிடும்.. போலீஸ்காரன் வந்து.. கேக்கிற விதத்தில கேட்டா.. எல்லா உண்மையும் வெளிய வந்திடும்.. என் மகன் உனக்கு அப்படி என்ன குறை வைச்சான்? காசு பணம் சேர்த்து வைக்கலையா? வீடு வாசல்னு கட்டிக் கொடுக்கலையா?
ராதா : அதெல்லாம் இருந்தா மட்டும் போதுமா? (EFX) ஏன் என் வாயை கிளர்றிங்க..
மரகதம் : பார்த்தியா.. உன் வாயாலயே உண்மை வருது..
ராதா : ஐய்யோ .. அத்தை.. கொஞ்சம் நிப்பாட்ரிங்களா.. இத்தனை நாள் உங்க மகனோட தொல்லை.. இப்ப உங்க தொல்லை!
(EFX : போலீஸ் வண்டி வரும் சத்தம்..)
மரகதம் : இப்போ தெரிஞ்சிரும்! போலீஸ்காரங்க வந்தா.. எல்லாம் தெரிஞ்சிரும்!
காட்சி : 2.
நடிகர்கள் 1. ராஜன் 2. மரகதம்
( ராஜன் அவன் அம்மாவிடம் சத்தம் போடுகிறான் )
ராஜன் : இப்போ உங்களுக்கு சந்தோஷமா? ஏம்மா நீங்க மட்டும் இப்படியெல்லாம் யோசிக்கிறிங்க.. அண்ணியை பார்த்தா கொலைகாரி மாதிரியா தெரியுது?
மரகதம் : நீ பேசாம இருடா.. உனக்கு ஒன்னும் தெரியாது.. அவதான் உங்க அண்ணனை கொன்னுட்டா.. இன்னும் கொஞ்ச நாள்ல உனக்கும்.. எல்லாருக்கும் உண்மை என்னான்னு தெரியத்தான் போகுது..
ராஜன் : அம்மா.. உண்மை என்னான்னு தெரியாம நாம இப்படி அவசரப் பட்டா.. பாதிக்கப் படப்போறது நாமதான்.. நம்ம குடும்ப கௌரவம்தான்.. இது ஏன் உங்களுக்கு புரிய மாட்டுது..
மரகதம் : யாரு அவசரப் படறாங்க.. நான் எதையும் பெரிசா எடுத்துக்காம இருந்ததாலதான் இப்போ என் மகனையே இழந்திட்டு நிக்கிறேன்.. அண்ணைக்கே உங்க அண்ணன் தலைப்பாடா அடிசிகிட்டான்..
ராஜன் : என்னம்மா சொல்றீங்க?
மரகதம் : டேய்.. ராஜா.. உங்க அண்ணி.. தப்பானவடா!
ராஜன் : அம்மா! என்னம்மா நீங்களே இப்படி சொல்றீங்க..
மரகதம் : இதை நான் சொல்லலை.. சாகறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி உங்க அண்ணன் அவனே எங்கிட்ட சொல்லி அழுதான்.. இந்த பாவி அதை பெரிசா எடுத்துக்காம அவனுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பிட்டேன்.. (அழுகிறாள்)
தொடரும்..
குறிச்சொற்கள்
சிறுகதை
Tuesday, March 17, 2009
ஒரு வழிப் பாதை.. !
ரவி, STPM முடித்த மாணவன். சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். அவன் நன்கு படித்து, மருத்துவராகி நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் சேவையாற்ற வேண்டும் என்று அவனது விதவைத் தாயார் அவன் படிப்பதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தார். அவனது தாயாரின் கனவை நனவாக்கவும்.. தனது எதிர்காலத்தை செழிப்பாக்கவும்.. ரவி.. முழு மூச்சாக, கல்வியில் மட்டும் கவனம் வைத்து, படிப்பை தொடர்ந்து, பரீட்சை எழுதி நல்ல மதிப்பெண்களையும் பெற்றிருந்தான். பல்கலைக்கழக வாய்ப்பிற்காக காத்திருக்கின்றான். பதில் வந்தது. ஆவலுடன் அஞ்சலைப் பிரித்தவனுக்கு, படித்தவனுக்கு, மகிழ்ச்சியைவிட அதிர்ச்சியே அதிகமாக இருந்தது.. ஆம்.. அவனுக்கு உள்நாட்டு பல்கலைக் கழகமொன்றில் பட்டப் படிப்பை தொடர வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால்.. அவன் விரும்பிய, அவன் தாயார் எதிர்பார்த்த.. மருத்துவத் துறையில் அல்ல. மாறாக, பொறியியல் துறையில்!
ரவியின் தாயாருக்கு வருத்தம்.. ரவிக்கோ பெருத்த ஏமாற்றம். ஏமாற்றம் எரிமலைப் பிழம்பு போல நெஞ்சில் அனல் கக்கி அவனுக்கு சினத்தை மூட்டியது. அவனது தாயாரின் வாடிய முகமோ அவனது சினத்தை சீண்டி அதிகமாக்கியது.. ஏமாற்றத்தோடு அன்றைய இரவு கண்ணயர்ந்தான்..
பொழுது விடிந்தது.. அன்பே உருவான அவனது அன்னை அவனை எழுப்பினார். “எந்தத் துறையானால் என்ன.. இந்தத் துறையிலும் உன்னால் சாதிக்க முடியும்.. நல்ல விதை எந்த நிலத்திலும் நின்று முளைக்கும்”, என்று அவனுக்கு ஆறுதல் கூறி, அந்த வாய்ப்பை நழுவ விட வேண்டாமென அறிவுறை கூறினார். தாயின் வாக்கே தன் போக்கென அவனும் பல்கலைக் கழகம் சென்றான். தன் தாயாரின் அன்புக் கட்டளையை கருத்தில் கொண்டு கற்றான். பல்கலைக் கழகத்தில் சிறந்த மாணவன் என்ற விருதோடு பட்டமும் பெற்றான். ஈன்றாள் அன்று அகம் குளிர்ந்தாள். இவன் மனம் மகிழ்ந்தான்.
பொறியியல் துறையில் பெற்ற அறிவு.. மருத்துவத் துறையில் இருந்த ஆர்வம்.. இரண்டும் அவனை ஒரு புதிய மருத்துவக் கருவியை கண்டுபிடிக்க தூண்டின. முயற்சி திருவினை பயத்தது. பார் போற்றும் பெயர் பெற்றான்.. அவனது இத்துனை வளர்ச்சிக்கும் தன் அன்னையின் அரவணைப்பே காரணம் என் பறை சாற்றினான். அப்போது அவனை ஈன்றவள் பெரிதுவந்தாள். அகக்கண்ண்கள் கலங்கி அதன் துளிகள் நிஜக் கண்களில் துளிர்த்தன.
அன்றைய இரவு.. சாதித்து விட்டோம் என்ற அமைதியோடு அன்னையின் மடியில் கண்ணயர்ந்தான்.
மீண்டும் பொழுது விடிந்தது.. அன்னை அவனை எழுப்பினாள்.. பதில் இல்லை.. அசைத்தாள்.. அசையவில்லை.. “ஐயகோ.. !!” என்று கதறினாள்..
அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறான் மகன்.. அவனது அசைவற்ற உடலையும் சேர்த்து! “அம்மா.. அழாதிங்க.. எனக்கு ஒன்னுமில்லை..!” அவள் காதுகளில் இவன் கத்துவது கேட்ட பாடில்லை! திகைக்கிறான்..
“என்ன? ஒன்றும் புரியவில்லையா?” ஒலித்தது ஒரு குரல்.. எங்கேயோ கேட்ட குரல்.. “அப்போழுதே சொன்னேனே.. அவசரப் படாதே என்று.. என் பேச்சை கேட்டாயா.. இப்பொழுது பார்.. உன் உணர்வற்ற உடலை கட்டியணைத்து கதறும் தாயின் கண்ணீரைக் கூட உன்னால் துடைக்க முடியாது.. பார்.. நன்றாகப் பார்..” என்றது அந்த குரல்..
“ஏன்.. என்ன ஆச்சி எனக்கு?”
“மறந்து விட்டாயா.. நேற்று இரவு மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லையே என்று விஷம் குடித்தாயே.. அதற்குள் மறந்து விட்டாயா?
“அப்படியென்றால்.. நான் படித்து பட்டம் வாங்கியது? விருது வாங்கியது..? கருவி கண்டு பிடித்தது??
“எல்லாம் நடந்திருக்கும்.. நீ அவசரப்படாமல் இருந்திருந்தால்..”
“அப்போ நீ..”
“நான் உன்னோட மனசாட்சி..! நீ இறந்து ஆறு மணி நேரமாகுது..”
“வேண்டாம்.. நான் சாக மாட்டேன்.. நான் சாக மாட்டேன்.. அம்மா..அம்மா..”
“அட பைத்தியமே.. நினைத்தவுடன் திரும்பிச் செல்லக் கூடிய இடத்திற்கா நீ வந்திருக்கிறாய்? இனி உன் விதி உன் கையில் இல்லை.. இது ஒரு வழிப் பாதை..!!”
-அசுபம்-
குறிச்சொற்கள்
சிறுகதை
Subscribe to:
Posts (Atom)