தமிழோடு வாழ்பவன்..

My photo
சுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia
மனிதத்தை மதிக்கும் மனிதன்..
Showing posts with label மயிலிறகு. Show all posts
Showing posts with label மயிலிறகு. Show all posts

Monday, April 13, 2009

மயிலிறகு..

சின்ன வயதில், மயிலிறகை புத்தகத்தில் மறைத்து வைத்து, அது குட்டி போடும் என்று நீங்கள் காத்திருந்தது உண்டா? பென்சிலை திருகி அதற்கு தீனி போட்டது உண்டா? என்ன உங்கள் அருகில் இருப்பவர் முகத்தில் லேசான புன்னகை தோன்றுகிறதா ? அப்படியானால்.. அவரின் இளமைக்காலம் அவருக்கு நினைவவுக்கு வந்து விட்டது என்று அர்த்தம்..!
இது உங்களுக்கு மட்டுமல்ல, நம்மை போன்ற எத்தனையோ பேர் இளமைக்காலத்தில் செய்ததுதான்.. இன்னமும் பிள்ளைகள் செய்து கொண்டிருப்பதுதான்..!

சரி, மயிலிறகை புத்தகத்தில் வைக்கும் இந்த பழக்கம்.. எப்படி வழக்கத்தில் வந்தது?
அந்த காலத்தில், நமது முன்னோர்கள், ஒரு புத்தகத்தை படிக்கும் பொழுது, புத்தகக் குறியீடாக அதாவது bookmark-ஆக மயிலிறகை பயன் படுத்தி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.. அதுவே பிறகு வழக்கமாகிவிட்டது. அதற்கு குட்டி போடும் கதைகளும் பிறந்து விட்டன!
அது மட்டுமா? அந்த காலத்தில் மயிலிறகை மையில் நனைத்து, எழுதவும் பயன் படுத்தி இருக்கிறார்கள்.. இந்த மயிலிறகுக்கு.. தமிழில் ‘பீலி’ என்ற இன்னொரு பெயரும் உண்டு...
K.கிருஷ்ணமூர்த்தி