தமிழோடு வாழ்பவன்..

My photo
சுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia
மனிதத்தை மதிக்கும் மனிதன்..

Tuesday, May 11, 2010

ஏட்டுக் கல்வியா? தொழிற் கல்வியா? சிறு தொழிலா??

நண்பர்களே.. உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது? நாட்டு நடப்பு என்ன தெரியுமா?

பதினாறு வயது மாணவன் ஒருவனுக்கு எப்படி அறிவுரை சொல்வது? முடியுமா நம்மால்?? இடைநிலைக் கல்வி முடித்த மாணவன் ஒருவன், பல்கலைக் கழகத்தில் சென்று படித்துக் கிழித்து பட்டமெல்லாம் வாங்கிவிட்ட நம்மைப் போன்றவர்களைப் பார்த்து கேட்பது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.. "என்ன அங்கிள் படிக்கிறது?"

பெரியவர்கள், பெற்றோர்கள் நம்மைப் பார்த்து குழப்பத்தோடு கேட்பது.. "எங்க அனுப்பலாம் பையனை..?"

இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் உண்டா நம்மிடம்? சிலனேரம் மனதுக்குள்ளும்.. சிலநேரம் வெளிப்படையாகவும் நான் சொல்லும் பதில் இதுதான்..

"நல்லா படிச்சா.. நல்ல வேளைக்குப் போகலாம்..
படிக்காம இப்பவே எதாவது தொழிலை கத்துக்கிட்டா.. பின்னாளில் நல்ல லாபம் பார்க்கலாம்.. இப்பவே சின்னதா ஏதாவது தொழில் பண்ணா.. பின்னாடி பெரிய தொழிலதிபர் ஆகலாம்.. நல்லா படிச்ச நூறு பேருக்கு வேலை போட்டுக் கொடுக்கலாம்.."

நான் சொல்றது தப்புன்னா.. என்னை மண்ணிச்சிடுங்க..! ஆனா.. அதுதான் நிஜம்..

5 comments:

அமுதா கிருஷ்ணா said...

ரொம்ப கரெக்டாய் சொல்லி இருக்கீங்க....

கிருஷ்ணா said...

வணக்கம் அமுதா..! எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் மருத்துவராக இருக்கிறார். அவர் என்னிடம் சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது.. "ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சேன்.. இப்பவும் ரொம்ப கஷ்டப்பட்டு வேலை செய்யிறேன்.." இது அப்பட்டமான உண்மை!

Sathis Kumar said...

நிதர்சனமான கருத்துகள். ஆமோதிக்கிறேன் நண்பரே..

கிருஷ்ணா said...

நன்றி நண்பரே!

இராஜராஜேஸ்வரி said...

காலத்திற்கு ஏற்ற கருத்து.பாராட்டுக்கள்.