தமிழோடு வாழ்பவன்..

My photo
சுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia
மனிதத்தை மதிக்கும் மனிதன்..

Monday, January 4, 2010

தாலி வந்த கதை

நண்பர் வேடிக்கை மனிதனின் 'தாலி புனிதமா?' http://sharavanaanu.blogspot.com/2009/12/blog-post.html என்ற கட்டுரையை படித்த பின்பு எனக்கு ஏதோ ஒரு விதத்தில் தெரிந்த.. தெரிய வந்த தாலியைப் பற்றிய தகவலை இங்கே பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. இதை நண்பரின் கட்டுரைக்கு பின்னூட்டாக போட்டிருக்கலாம்.. சிறு கருத்தாக இருந்திருந்தால்..!

சரி.. இந்த தாலி வந்த வந்த கதைதான் என்ன..?

ஆரம்பத்தில், நாகரிகம் குறைந்திருந்த மனிதனிடம்.. பெண் மோகம் குறைவாகவே இருந்தது.. ஆனால் பின்னாளில் நாகரிகம் வளர வளர மனிதனின் பெண்ணாசை பெருத்துவிட்டது. (அதனால்தானே நான் மிருகத்திடமிருந்து மாறுபடுகிறோம்..! )

ஆரம்பத்தில், மிருகங்களைப் போலவே மனிதனும் தனக்கு தேவைப்பட்ட துணையை தானாக அடைந்தான்.. வலிமையுள்ள, பலசாலியான மனிதன் தன் கூட்டத்திற்கு அரசனானான் அல்லது தலைவனானான். தலைவனானால்.. தான் நினைத்த பெண்களுடன் சல்லாபிக்க ஏது தடை..? தனது ஆக்கிரமிப்பை மற்ற ஆண்களுக்கு உணர்த்த தான் மோகிக்கும் பெண்களின் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி.. தனது அடையாளமாக ஏதாவது ஒரு சிறு பொருளை கட்டி விடுவான் அந்த தலைவன். உதாரணத்திற்கு, அவன் வேட்டையாடி கொண்டு வந்த புலி பற்கள்.. நகங்கள் போன்ற சின்னங்களை கட்டி விட்டான். இதைப் பார்க்கும் மற்ற ஆண்கள்.. அந்த கயிற்றை அனிந்திருக்கும் பெண் அந்த பலசாலித் தலைவனுக்கு சொந்தமானவள் என்று அறிந்து அந்தப் பக்கமே தலை சாய்க்க மாட்டார்கள்.

பின்னாளில், நாகரிகம் வளர வளர இந்த கயிற்றினால் தலைவனுக்கு சில பிரச்சனைகள் தோன்ற ஆரம்பித்தன. அவனுக்கு சொந்தமான பெண்களுக்குள் பொறாமை, போட்டி மற்றும் பல அடிப்படைப் பிரச்சனைகள் ஆரம்பமாயின.. அதனால், தனது அடையாளத்தை.. மாராப்பில் மறைத்து வைக்கச் சொன்னான். நாளடைவில் மற்ற ஆண்களுக்கும் கொஞ்சம் தைரியம் வர, தங்களுக்கு பிடித்த பெண்களை கைப்பிடிக்க ஆரம்பித்தனர். அவர்களும் தலைவனைப் பின்பற்றி ஏதாவது ஒரு சின்னத்தை பெண்களின் கழுத்தினில் கட்டிவிட ஆரம்பித்தனர்.

பின்னாளில் இது ஒரு கலாச்சாரமாக மாறிவிட, பொதுவான சின்னங்களை பயன்படுத்தினர். பெண்கள் திருமணம் ஆனதும், தாமதிக்காமல் குழந்தைப் பேறு கொள்ள வேண்டும் என்று நினைத்து, சில பெண் உறுப்புக்களை தாலியின் சின்னமாக அமைத்தனராம். அப்படி வந்ததுதான் பொட்டுத் தாலி (பெண்ணின் மார்பகம்), திருமாங்கல்யாம் (பிறப்புருப்பைச் சார்ந்திருக்கும் எலும்புகள்) போன்றவை.

இந்த பிறப்பு உறுப்புச் சின்னங்கள்தான் இன்னமும் நம் பெண்களின் கழுத்தில் தாலியாக அலங்கரித்து இருக்கிறது என்று பெரியவர் ஒருவர் சொன்ன கதையைத்தான் இங்கே எழுதியிருக்கிறேன். அவர் சொன்ன விசயங்களை நான் எனக்கு புரிந்த விதத்தில் எழுதியிருக்கிறேன். இந்த கதை என் சிற்றறிவால் ஏற்றுக் கொள்ளப் பட்ட கதை. மற்றவர்கள் கருத்துக் கூறினால் சிறப்பாக இருக்கும்..

நன்றி
K. கிருஷ்ணமூர்த்தி

பின்குறிப்பு : என் மனைவி தாலி அணிவதை நான் விரும்பாததால்.. இன்றுவரை அவளும் தாலி அணிவதில்லை..!

Thursday, October 29, 2009

மன இறுக்கம் தீர ஓர் உல்லாசப் பயணம்

இன்றுமுதல் சில நாட்களுக்கு தாய்லாந்தின் பூக்கெட் தீவிற்கு (மனைவியோடுதான்) உல்லாசப் பயணம் செல்கிறேன். சில மாதங்களாக ஏற்பட்ட மன உலைச்சல், அலைச்சல், இழப்புக்களினால் ஏற்பட்ட காயங்கள், சோகம், விரக்தி, வேலைப்பழுவினால் ஏற்பட்ட களைப்பு.. இவற்றை எல்லாம் பூக்கெட் தீவில் இறக்கி விட்டு வர வேண்டும் என்றே செல்கிறேன்.

அடுத்த வாரம் மீண்டும் இந்த வலைப்பதிவில் புதிய பதிவுகள் இட முயற்சிக்கின்றேன்..

"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க..!"

Tuesday, August 25, 2009

சிறிய இடைவெளி

அன்பு வாசகர்களே..

கடந்த 7.08.2009-இல் எனது ஆருயிர் மாமா, எனது உயிரினும் மேலான சகோதரியின் கணவர், திரு வெங்கடேசன் அவர்கள் சிவபதம் அடைந்ததால்.. எனது இந்த வலைப்பதிவில் தொடர்ந்து இடுகைகள் இடம்பெறாமல் போனது. இன்னமும் மீளாத் துயரத்திலும் அதிர்ச்சியிலும் இருக்கும் நான் சில நாட்கள் கழித்து மீண்டும் எனது 'அத்வைத தாம்பத்யத்தையும்' பிற கவிதைகளையும் தொடர்வேன். நண்பர்கள், வாசகர்கள் அணைவரும் சற்று பொறுமை காப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் மற்ற அலுவலகளை கவனிக்கிறேன்.

கவித்தமிழின் பயணம் விரைவில் தொடரும்..

இக்கண்
K.கிருஷ்ணமூர்த்தி

Tuesday, July 28, 2009

என் தாயாரும் கிரெடிட் கார்டும்!

கிரெடிட் கார்டு (Credit Card) என்பது நமக்கெல்லாம் பரீட்சயம் ஆகும் முன்பே, பாடசாலைப் பக்கமே ஒதுங்காத என் தாயார் மட்டுமல்ல.. இன்னும் எத்தனையோ பேர் இந்த கிரெடிட் கார்டுகளை பயன் படுத்தி இருந்தார்கள். அதிலும், நம்மை எல்லாம் விட நேர்த்தியாகவும், புத்திசாலித்தனமாகவும் வட்டியே இல்லாத கிரெடிட் கார்டுகளை காலங்காலமாக பயன் படுத்தி இருக்கிறார்கள் என்று ஒரு முறை வானொலியில் சொன்னேன்.. உடனே தொலைபேசி அலறத் தொடங்கி விட்டது ஆர்வத்தில்..!

உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?!

மலேசியத் தோட்டப்புறத்தில் பிறந்தவன் நான். எங்கள் தோட்டங்களில் எல்லாம் ஒரு பழக்கம் இருக்கும். அதாவது, மீன் வியாபாரி, காய்கறி வியாபாரி, பலசரக்குக் கடை வியாபாரிகள் எல்லாம் '555' என்ற எண் பொறித்த (மலாய் மொழியில் Buku Tiga Lima என்று பிரபலம்) புத்தகத்தை வைத்திருப்பார்கள். அந்த புத்தகமோ, இன்றைய கிரெடிட் கார்டு அளவைப் போலத்தான் இருக்கும்.

இவர்களிடம் பொருள் வாங்குபவர்களுக்கு இந்த புத்தகத்தை ஆளுக்கு ஒன்றாக கொடுத்துவிட்டு, அவர்கள் வாங்கும் பொருட்களின் மதிப்பை அந்த புத்தகத்தில் எழுதிவிட்டு, தாங்களும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொள்வார்கள். இந்த முறை இன்னமும் கூட சில தோட்டங்களில் நடைமுறையில் இருக்கிறது. மாதம் முடிந்ததும், சம்பளத் தேதி முடிந்ததும், வீடு வீடாய் சென்று கணக்கை சரிபார்த்து மொத்தத் தொகையை பெற்ற்றுக் கொள்வார்கள். அல்லது, வாடிக்கையாளர்கள் கடையில் சென்று பணத்தை செலுத்தி விடுவார்கள். பணம் செலுத்தாவிட்டால் அடுத்த மாதத்திற்கு உண்டான பொருட்களை வாங்க முடியாது.

இந்த '555' நோட்டுப் புத்தகத்தைத் தான் நான் கிரெடிட் கார்டு என்று சொன்னேன் அன்று. இதில் வசதி என்னவென்றால், மாத பாக்கியை தாமதமாக தந்தாலும் கிரெடிட் கார்டு போல் வட்டி இல்லை! பல வியாபாரிகள் பொருட்களை நமது வசிப்பிடத்திற்கே கொண்டு வந்து அத்தியாவசியப் பொருட்களை வினியோகிப்பதும், பணத்தை நம்மைத் தேடி வந்து பெற்றுக் கொள்வதும்தான் இதன் தனிப் பெரும் சிறப்பு. இது இப்போதுள்ள கிரெடிட் கார்டில் சாத்தியமா?

அந்த காலத்தில், ஒருவரின் நன்னடத்தை, வாக்குச் சுத்தம் போன்றவற்றை கொண்டு அவர்களுக்கு எவ்வளவு கடன் தரலாம் என்று நிர்ணயித்தனர். அதனால், பிரச்சனைகள் குறைவாக இருந்தன. இன்று..?! கிரெடிட் கார்டினால் உலக அளவில் பிரச்சனைகள்!!!

மீண்டும் சொல்கிறேன், நாம் எவ்வளவு தான் நவீனமானாலும்.. நம் முன்னோர்கள் நம்மைவிட புத்திசாலிகள்..! என் தாயார் என்னைவிட புத்திசாலியான கிரெடிட் கார்டு பயனீட்டாளர்..!!!!

K. கிருஷ்ணமூர்த்தி

Sunday, July 19, 2009

இப்படியும் செய்யலாம்..!

நமது வாழ்க்கை முறை நாளுக்கு நாள், சுறுசுறுப்பாகிக் கொண்டே போகின்றது. ஆனால், நாமோ, நாளுக்கு நாள் சோம்பலாகிக் கொண்டே போகின்றோம்.. உதாரணத்திற்கு, remote control இல்லாமல் நம்மால் படம் பார்க்க முடிகிறதா?! remote control கானாமல் போய் விட்டால் ஒரு கையே காணாமல் போனது போலாகிவிடும்! இல்லையா?

நாம் சின்ன சின்ன வேலைகளை செய்யும் பொழுது கூட நமது உடலில் இருக்கும் calories அளவு குறைகின்றது! இதனால் ஓரளவு நமது உடல் எடையை நம்மால் கட்டுப்படுத்த முடிகிறது..

ஒரு அரை மணி நேரம் வீட்டில் தூசு தட்டிக்கொண்டிருந்தாலே.. நாம் உடலிலுள்ள 50 கலரிக்கள் எரிந்துவிடும். அது மட்டுமல்ல, இது 10 நிமிடங்கள் மெது நடனமாடுவதற்கு சமம்.

அரை மணி நேரம் துணிகளை, கைகளை மாற்றி மாற்றி ஐயர்ன் செய்வது, 11 நிமிடங்கள் aerobics செய்வடற்கு சமம். இதனால் 70 கலரிக்கள் எரிகின்றன.

அரை மணி நேரம் ஜன்னலை துடைப்பதால், 125 கலரிக்கள் குறைகின்றன.

படுக்கை அறையை தட்டி சுத்தம் செய்வதால், 130 கலரிக்கள் எரிந்து போகின்றன. இது 12 நிமிட மெதுவோட்டத்திற்ற்கு அதாவது, jogging செய்வதற்குச் சமம்.

விடுமுறை நாட்களில், அரை மணி நேரம் காரை கழுவினால், அது 143 கலரிக்களை எரிக்கிறது. இது, வயிற்றுப்பகுதிக்கு நல்லதொரு உடற்பயிற்சி.

அரை மணி நேரம், நாம் குளிக்கும் அறையை தேய்த்து கழுவுவதால், 200 கலரிக்கள் குறைகின்றன. இது ஒரு 45 நிமிடங்கள் நடனப்பயிற்சிக்கு சமம்.

மாடிப்படிக்கட்டுகளில், அரை மணி நேரம் ஏறி இறங்கி வந்தால், 285 கலரிக்கள் குறைகின்றனவாம். இது இருதயத்துக்கு நல்ல உடற்பயிற்சி. 19 நிமிடங்கள் வேகமாக ஸ்கிப்பிங் செய்வதற்கு சமம் இது!

இதனால்தான், நமது முன்னோர்களும் பெற்றோர்களும், நமது வேலைகளை நம்மையே செய்ய சொல்கின்றனர் போல் தெரிகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு குறைந்து சுறுசுறுப்பு வருகிறது, பொறுப்புணர்ச்சி வருகின்றது.. உடலும் ஆரோக்கியமாக இருக்கின்றது! எல்லாம் சரி.. இன்று உங்கள் படுக்கையை யார் சுத்தம் செய்தது?!

Monday, July 6, 2009

இன்னும் ஒரு முறை..

அது ஒரு கோடைக் காலம். நிலம் வரண்டு போயிருந்ததால், விவசாயி ஒருவன் மிகுந்த கவலை கொண்டான்.. பயிர்கள் வாடிவிடும் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கினான்.. அப்போது அந்த ஊருக்கு ஒரு துறவி வந்தார். அவரிடம் விவசாயி யோசனை கேட்க சென்றான். துறவியோ நிஷ்டையில் இருந்தார். அவரை தொந்தரவு செய்ய மனமில்லாமல் விவசாயி காத்திருந்தான்.

துறவி கண் முழித்தார். விவசாயி வணங்கினான். துறவி ஆச்சர்யத்தோடு அவனைப் பார்த்துவிட்டு என்ன விஷயம் என்று வினவினார். அதற்கு விவசாயி, "சுவாமி, தாங்கள் முற்றும் உணர்ந்தவர். இந்த கோடைக்காலத்தில் நதியெல்லாம் வரண்டு விட்டது. எனது பயிர்களுக்கும் எனக்கும் நீர் இல்லாமல் தவிக்கிறேன். நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்..", என்றான்.

அதற்கு துறவி, "இந்த லோகத்தில், எல்லாம் இருக்கிறது.. உன் தோட்டத்திலேயே தண்ணீரும் இருக்கிறது. கிணறு தோண்டினால், தண்ணீர் கிடைக்கும்..", என்று கூறிவிட்டு மீண்டும் கண் மூடி நிஷ்டையில் ஆழ்ந்தார்.

மகிழ்ந்த விவசாயி.. தன் தோட்டத்திற்குச் சென்று தோண்ட ஆரம்பித்தான். முதல் நாள் பத்து அடி ஆழம் தோண்டினான். தண்ணீர் வரவில்லை. மறுநாள், இன்னும் ஐந்தடி தோண்டினான்.. அப்போதும் தண்ணீர் வரவில்லை..! வாட்டமடைந்த விவசாயி, மீண்டும் துறவியிடம் சென்றான்.

"சுவாமி, தாங்கள் சொன்னது போல் தோண்டிப் பார்த்தேன்.. நீர் வரவில்லை!", என்றான். அதற்கு துறவி, " முயற்சியையும் நம்பிக்கையும் கைவிடாதே.. தொடர்ந்து தோண்டு.. தண்ணீர் வரும்.." என்றார்.

தோட்டத்திற்கு வந்த விவசாயி, மீண்டும் தோண்டினான்.. இருபது அடி.. முப்பது அடி.. நாற்பது அடி.. தோண்டித் தோண்டி களைத்துப் போன விவசாயி, நம்பிக்கை இழந்துவிட்டான். இனி துறவியின் பேச்சை நம்பி புண்ணியமில்லை என்று எண்ணி அந்த தோட்டத்தை விட்டுவிட்டு சென்று விட்டான்.

சில நாட்கள் கழித்து, அந்தப் பக்கமாக வந்த வழிப்போக்கன் ஒருவன், அந்த தோட்டத்தை பார்த்தான். ஆளே இல்லாமல் வாடி இருந்த தோட்டத்தையும்.. தோண்டப்பட்ட கிணறையும் பார்த்துவிட்டு.. நடந்தவற்றை யூகித்துக் கொண்டான். நம்பிக்கையோடு அந்த குழியில் இறங்கி தோண்ட ஆரம்பித்தான்.. ஐந்தடி ஆழம் தொடர்ந்து தோண்டியதும்.. தண்ணீர் வரும் அறிகுறி தெரிந்தது! மகிழ்சியில் துள்ளிக் குதித்தான்...!

இந்தக் கதையின் சாரம்: முயற்சி என்பதே நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப் படுவதுதான். நம்பிக்கை இழந்துவிட்டால், முயற்சி பலன் அளிக்காது! எடுத்த காரியம் வெற்றி அடையும் வரை தொடர்ந்து ஒரே சிந்தனையில் முயன்றால், நினைத்த காரியம் கைகூடும்! அத்தனை அடிகள் ஆழம் தோண்டிய அந்த விவசாயிக்கு.. இன்னும் ஐந்து அடிகள் தோண்டும் பொறுமை இருந்திருந்தால்!

Sunday, June 21, 2009

எல்லா நோய்களுக்கும் ஒரே மருத்துவம்..

எல்லா நோய்களுக்கும் ஒரே மருத்துவம்.. எண்ணெய் மருத்துவம்!

ஆச்சரியம், ஆனால் உண்மை! கிட்டத்தட்ட நம் உடலில் ஏற்படக்கூடிய எல்லாவிதமான நோய்களுக்கும் ஓர் எளிய, பாதுகாப்பான, மலிவான மருத்துவ முறை ஒன்று உண்டு என்றால், வியாக்காமல் என்ன செய்வது?

தும்மல், சளி, களைப்பு, தூக்கமின்மை, மூட்டு வலி, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி), தலைவலி, ஒற்றைத் தலைவலி, முழங்கால் வலி, ஆஸ்துமா, புற்று நோய், இதய நோய், பார்க்கின்சன் நோய்கள், பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், இரத்த அழுத்தம், கல்லீரல், நுரையீரல் நோய்கள், பக்க வாதம், நரம்பு சம்பந்தமான நோய்கள், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, வாயுத்தொல்லை, மாதவிடாய் தொல்லைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை இப்படி எண்ணிலடங்கா நோய்களுக்கும் தொல்லைகளுக்கும் மிக எளிமையான மருத்துவக் கோட்பாடு ஒன்றினை மனித குலத்துக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள். அதையே அறிவியல் முறைப்படி ஆய்வு நடத்தி மெய்ப்பித்துக் காட்டினார் அந்நாளைய சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அறிஞர், டாக்டர் மெத்கராஷ் என்பவர்.

அன்று, அவர் விளக்கியது ‘ஆயில் புல்லிங்’ (Oil Pulling) எண்ணும் மருத்துவம். இதனைத் தமிழில் எண்ணெய் மருத்துவம் என்று கொள்ளலாம்.

அதாவது, தூய்மை செய்யப்பட்ட நல்லெண்ணெயோ, ஓலிவ் எண்ணெயையோ, வேர்க்கடலை அல்லது சூரியகாந்தி எண்ணெயையோ, இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டு, அமைதியாக, ஓய்வாக அதனை வாயில் சப்பியவாறு, வாய் முழுவதும் பரந்து திரியும்படி கொப்பளியுங்கள். பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறும் கொப்பளியுங்கள். ஆனால் விழுங்கி விடாதீர்கள்!

இப்படியே தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொப்பளியுங்கள். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில நிமிடங்களில் அந்த தன்மை மாறி வாயினுள் எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில் எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது அதனை உமிழ்ந்து விடுங்கள். உமிந்த திரவம் வெள்ளையாக இல்லாது மஞ்சளாக இருந்தால், இன்னும் கொஞ்ச நேரம் கொப்பளிக்க வேண்டும் என்று அர்த்தம். அப்படி உமிழ்ந்ததும் வாயைக் கழுவி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இதனால், உங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கிருமிகள் எல்லாம் நீங்கள் உமிழ்ந்த நீர்மத்தில் முழுமையாக வெளியேற்றப் படுகின்றன.

இந்த எளிய எண்ணெய் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது. காலையில் 6.30 மணிக்கெல்லாம் எழுந்து, வெறும் வயிற்றில், பல் துலக்கிய உடன் செய்தல் நலம். விரைவில் நிவாரணம் வேண்டுவோர், நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதைச் செய்ய வேண்டுமென்பது விதி.

இந்த மருத்துவத்தைச் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே எண்ணெயையாவது அல்லது Brand-ஐயாவது மாற்றிவிடுங்கள். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட வேண்டாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது!

இந்த மருத்துவத்தை, கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. எதாவது நோய் நிமித்தம் மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் அந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம்.

இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு, நோயின் தன்மை சற்று அதிகரித்து பின்னர் குறைகிறது. இது, நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது என்பதின் அறிகுறி. அணையப் போகும் நெருப்பு சுடர் விட்டு கொஞ்ச நேரம் எரியுமல்லவா..? அதுபோலத்தான்.

சரி.. இப்படி செய்வதால் எப்படி எல்லா நோய்களும் குணமாகும் என்று கேட்கிறீர்களா? அதற்கு சரியான விளக்கமும் அறிவியல் ரீதியில் தரப்படுகிறது. அதாவது, பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து mucus membrane மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலின் Metabolism புத்துணர்வு பெற்று நாள்தோறும் நலத்துடன் மிளிர்கிறது.

இந்த எளிய வைத்திய முறையை பின் பற்றுவதோடு, தூய காற்றை சுவாசித்து, நிறைய நீர் பருகி, அளவான சுகாதாரமான உணவுகளை உட்கொண்டு நல்ல முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால், அந்நாளில் முண்ணோர்கள் சொன்ன நோயற்ற வாழ்வு வாழலாம்.

சுபம்

K.கிருஷ்ணமூர்த்தி

(மூலம்: ‘எண்ணெய் மருத்துவம்’ எனும் புத்தகம்)

Tuesday, June 16, 2009

யார் குற்றவாளி..?! (பகுதி 9 & 10)

காட்சி: 9.

நடிகர்கள் 1. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் 2. கான்ஸ்டபிள் காசி 3. ராதா
4. மரகதம் 5. ஷங்கர்


(ஷங்கர் பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பும் நேரம், மரகதம் அங்கே வருகிறாள்)

மரகதம் : என்னப்பா ஷங்கர்.. பெட்டி படுக்கை எல்லாம் எடுத்துகிட்டு எங்க கிளம்பிட்டே?

ராதா : அத்தை.. நீங்க எப்போ வந்தீங்க?

மரகதம் : இது.. என் மகன் வீடு.. இங்க நான் எப்போ வேணும்னாலும் வருவேன்.. ஏன்.. தப்பான நேரத்தில வந்திட்டேன்னு சங்கடமா இருக்கா?

ஷங்கர் : அண்ட்டி.. ஏன் அண்ட்டி என்னென்னமோ பேசறிங்க.. ரகுனாத் சார்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டு போய் சேர்ந்திட்டாரு..

மரகதம் : சேர வச்சிட்டிங்க.. பண்றதையெல்லாம் ஒன்னா சேர்ந்து பண்ணிட்டு.. இப்போ ஒன்னும் தெரியாதவங்க மாதிரி டிராமா பண்றிங்க.. உங்களை நான் சும்மா விட மாட்டேன்..

ராதா : உங்களுக்கு நான் என்ன சொல்லி புரிய வைப்பேனோ தெரியலை! நான் பண்ண ஒரே தப்பு.. உங்க மகன் எனக்கு பண்ண கொடுமையை எல்லாம் யாருகிட்டயும் சொல்லாம மறைச்சதுதான்..

மரகதம் : சரிதான் நிறுத்துடி! சாட்சி சொல்ல என் மகன் இல்லைன்னு.. புதுசா இப்படி கதையா? எத்தனை நாளைக்கு இப்படி நடிப்பிங்க.. உண்மை ஒரு நாள் வெளிய வரத்தான் போகுது..

(அர்ஜுனும் காசியும் அங்கே வருகின்றனர்)காசி : அந்த ஒரு நாள்.. இன்னைக்குத்தான்.. எங்க ஐய்யா எல்லாத்தையும் கண்டு பிடிச்சிட்டாரு!

மரகதம் : நல்ல வேளை வந்தீங்க.. நீங்க வர்றதுக்குள்ளே ஓடிரலாம்னு பெட்டி எல்லாம் எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாரு.. ஷங்கர்..

அர்ஜுன் : எனக்கு எல்லாம் தெரியும்.. ராதா.. ஷங்கர்.. ரெண்டு பேரும் என் கூட போலீஸ் ஸ்டேஷனுக்கு வாங்க..

ராதா : நாங்க எதுக்கு வரனும்..? இதுல எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை..

அர்ஜுன் : எதுவா இருந்தாலும்.. ஸ்டேஷன்ல பேசிக்கலாம்.. இப்ப கிளம்புங்க..

மரகதம் : கடவுள் கண்ணை திறந்திட்டாருடி.. நீ பண்ண காரியத்துக்கு..

அர்ஜுன் : (குறுக்கே பேசுகிறார்) அண்ட்டி.. நீங்களும்தான்.. எங்க கூட வாங்க..

மரகதம் : நானா? எதுக்கு? என் மகன் ராஜன் இல்லாம நான் வரமாட்டேன்..

அர்ஜுன் : அவரும் அங்கதான் வந்துகிட்டு இருக்காரு.. வாங்க..



காட்சி: 10.

நடிகர்கள் 1. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் 2. கான்ஸ்டபிள் காசி 3. ராதா
4. மரகதம் 5. ஷங்கர் 6. பாலன் 7. ராஜன்


(அனைவரும் காவல் நிலையம் வருகின்றனர். அங்கே பாலனும் ராஜனும் இருக்கின்றனர்)

ராதா : பாலன்.. நீங்க என்ன பண்றிங்க இங்கே?

பாலன் : என்னை மண்ணிச்சிரு ராதா.. நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன்..

ராதா : என்ன உளர்றிங்க..

பாலன் : நீ அன்னைக்கு சொன்னதை.. இன்ஸ்பெக்டருகிட்ட சொல்லிட்டேன்..

ராதா : அது நான் ஏதோ ஆத்திரத்தில பேசனது.. அதுக்குன்னு நானே கொலை பண்ணதா ஆயிடுமா? என்னை யாரும் நம்ப மாட்டீங்களா?

அர்ஜுன் : ராதா.. மிஸ்டர் பாலன் கொடுத்த வாக்குமூலத்தின் படி.. மிஸ்டர் ரகுனாத் கொலை சம்பந்தமா.. உங்களை அரெஸ்ட் பண்றோம்..

ராதா : இன்ஸ்பெக்டர்.. ப்ளீஸ்.. என்னை நம்புங்க.. அவரை நான் கொலை பண்ணலை!

மரகதம் : எந்த கொலைகாரந்தான் தான் கொலை பண்ணதை ஒத்துக்குவான்..

அர்ஜுன் : இல்லைங்க ராதா.. இங்க இருக்கிற எல்லாரையும் விட.. மிஸ்டர் ரகுனாத்தோட சாவில உங்களுக்குத்தான் அதிக தொடர்பு இருக்கு.. மிஸ்டர் ரகுநாத் கவிதா என்ற பொண்ணு கூட தொடர்பு வைச்சிருக்கிறதா நீங்க தப்பா நினைச்சி.. அவசரப் பட்டிருக்கீங்க.. ரெண்டாவது.. அவரு உங்களையும் ஷங்கரையும் தப்பா பேசறதை உங்களால பொறுத்துக்க முடியலை.. அந்த கோவம் வேற.. மூனாவது.. ரகுநாத்.. மத்தவங்களுக்கு ஒரு நல்ல மனுஷனா இருந்திருந்தாலும்.. உங்களை கொடுமை படுத்தி இருக்காரு.. அதுல ஏற்பட்ட விரக்தி.. இது எல்லாம் சேர்ந்து உங்களைதான் குற்றவாளியா காட்டுது.. நிச்சயமா இந்த கொலையை நீங்கதான் பண்ணி இருக்கனும்!

(ராஜன் அங்கே வருகிறான்)

ராஜன் : இல்லை! எங்க அண்ணி இந்த கொலையை செய்யலை!

மரகதம் : டேய்.. என்னடா நீ? திடீர்னு வந்து என்னத்தை உளர்றே?!

ராஜன் : நீங்க சும்மா இருங்கம்மா..

அர்ஜுன் : அதெப்படி ராஜன்.. அவுங்க பண்ணலைன்னு இவ்ளோ உறுதியா சொல்றிங்க? எல்லாரும் அவுங்களைதான் குற்றவாளியா காட்டுறங்க.. எல்லா சாட்சியும் அவங்களுக்கு எதிரா இருக்கு.. கொலை பண்ண இடத்திலை அவுங்கதான் இருந்திருக்காங்க..

ராஜன் : ஐய்யோ.. அவுங்க அந்த இடத்தில இல்லை..

அர்ஜுன் : அப்படின்னா..? நீங்க இருந்திங்களா?!

(EFX: Music..)

அர்ஜுன் : சொல்லுங்க ராஜன்.. என்ன நடந்திச்சி?

ராஜன் : ஆமாம்.. அன்னைக்கு நாந்தான் இருந்தேன்.. எங்க அண்ணன் என்னை வரச் சொல்லி இருந்தாரு.. அவரை பார்க்கிறதுக்காக போனேன்.. அங்க, அவரு எங்க அண்ணியை பத்தி தப்பா சொல்லி என்னை அவங்களை கண்காணிக்க சொன்னாரு! அது எனக்கு கோவத்தை மூட்டுச்சி..

எங்க அண்ணியைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்.. எவ்ளோ எடுத்து சொன்னேன்.. எங்க அண்ணன் கேட்கலை.. எங்களுக்குள்ளே வாக்குவாதம் முத்தி போச்சி.. அவரை ஆத்திரத்தில தள்ளி விட்டுட்டு.. நான் போயிட்டேன்.. அவ்வளவுதான் எனக்கு தெரியும்..

அர்ஜுன் : மீதியை நான் சொல்றேன்.. கீழே விழுந்த உங்க அண்ணனுக்கு.. தலையில அடி பட்டிருச்சி.. அதோட அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருச்சி.. post mortem ரிப்போர்ட் படி.. அவரோட சாவுக்கு காரணம்.. மாரடைப்புத்தான்.. நீங்க யாரும் அவரை கொலை பண்ணலை!

ஷங்கர் : அப்புறம் ஏன் எங்களை எல்லாம் கூட்டிகிட்டு வந்து தொல்லை பண்ணிங்க..

அர்ஜுன் : கோவிச்சிக்காதிங்க.. அதுக்கு பல காரணங்கள் இருக்கு..

முதலாவது.. ராதா மேல அவுங்க மாமியாருக்கு இருந்த சந்தேகத்தை போக்கனும்..

ரெண்டாவது.. ரகுநாத்துக்கும் கவிதாவுக்கும் இருந்தது கள்ளத்தொடர்பு இல்லேன்னு தெளிவு படுத்தனும்..

மூனாவது.. இன்சூரன்ஸ் பணத்துக்காக ராதாதான் கொலை பண்ணிட்டாங்கன்னு பாலனும் நினைச்சிக்கிட்டு இருக்காரு.. அது அப்படி இல்லைன்னு தெளிவு படுத்தனும்..

கடைசியா.. அன்னைக்கு அவருகூட சண்டை போட்டது யாருன்னு எனக்கு புரியாமலேயே இருந்திச்சி.. அதையும் தெரிஞ்சிக்கனும்.. இந்த எல்லா குழப்பத்துக்கும் விடை காணத்தான்.. ராதாவை குற்றவாளின்னு சொன்னேன்.. அதுக்கு நீங்க எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க..

மாமியார் : அம்மாடி ராதா.. என்னையும் மன்னிச்சிரும்மா..

ராதா : யாரும் யாரையும் மன்னிக்க வேணாம் அத்தை.. நடந்ததையெல்லாம் மறந்திட்டு.. இனிமேலயாவது சந்தோஷமா இருப்போம்.. வாங்க எல்லாரும் நம்ம வீட்டுக்கு போகலாம்..

காசி : கிள்ளாடி சார் நீங்க.. எல்லாத்தையும் தெரிஞ்சிகிட்டு என் கிட்ட கூட சொல்லாம மறைச்சிட்டிங்களே சார்.. குற்றவாளி யாருன்னு கேட்டு கேட்டு என் பொண்டாட்டி என்னை தூங்கவே விடலை சார்!

(அனைவரும் சிரிக்கின்றனர்)

..சுபம்..

Monday, June 15, 2009

யார் குற்றவாளி..? (பகுதி 7 & 8)

காட்சி: 7.

நடிகர்கள் 1. ராதா 2. ஷங்கர்

(ஷங்கர் வீட்டிற்கு வருகிறான்..)

ராதா : வா ஷங்கர்..

ஷங்கர் : என்ன ராதா.. என்னென்னமோ கேள்விப்பட்டேன்.. ஒரு வாரம் நான் ஊர்ல இல்லை.. அதுக்குள்ளே என்னென்னமோ நடந்திருச்சே..

ராதா : நடந்தது என்னவோ நடந்திருச்சி.. ஆனா எல்லாரு சந்தேகமும் என் மேல இல்லை விழுந்திருக்கு.. என்னை மாட்டிவிட என் மாமியாரு மட்டும் போதும் போல இருக்கு!

ஷங்கர் : அவரு உனக்கு பண்ண கொடுமைக்கு.. கடவுளா பார்த்து கொடுத்த தண்டனைன்னு எடுத்துக்க வேண்டியதுதான்..

ராதா : எதுக்கும் நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இரு.. போலீஸ்காரங்க எந்த நேரத்திலயும் உன்னை வந்து விசாரிக்கலாம்!

ஷங்கர் : அதெல்லாம் காலையிலயே வந்துட்டாங்க..

ராதா : வந்தாங்களா? என்ன கேட்டாங்க?

ஷங்கர் : வேற என்ன கேப்பாங்க.. உன் மாமியாருதான் உனக்கும் எனக்கும் தொடர்பு இருக்குன்னு வாய்க்கூசாம சொல்லி வைச்சிருக்காங்களே!

ராதா : அது அவுங்க தப்பில்லே! இந்த மனுசன் சாகரதுக்கு முன்னாடி அவுங்ககிட்ட அப்படி சொல்லி அழுது இருக்காரு! அதனாலதான் இந்த கொலைக்கும் எனக்கும் தொடர்பு இருக்குன்னு அவுங்க நினைக்கிறாங்க..
நல்ல வேளை.. நீ ஊர்ல இல்லாம இருந்தே.. இல்லேன்னா.. இன்னேரம் உன்னை தூக்கி உள்ளே வைச்சிருப்பாங்க..

ஷங்கர் : கூடிய சீக்கிரத்தில வைச்சிருவாங்கன்னு நினைக்கிறேன்..

ராதா : என்ன ஷங்கர்? ஏன் அப்படி சொல்றீங்க?

ஷங்கர் : ராதா.. உண்மையை சொல்லு.. என்ன நடந்திச்சி?

ராதா : ஷங்கர்? நீங்களுமா என்னை சந்தேகப் படறிங்க?

ஷங்கர் : எனக்கு வேற வழி தெரியலை.. என்னை நான் காப்பாத்தி ஆகனும்.. என்ன நடந்திச்சின்னு தெரிஞ்சாகனும்.. ராதா : ஹ¤ம்.. அவரை கொன்னது யாருன்னு தெரிஞ்சா.. அவங்களுக்கு ஆறடிக்கு ஒரு மாலையை வாங்கிப் போடுவேன்.. என்னை இந்த கொஞ்ச நாளா எப்படி எல்லாம் சித்ரவதை செஞ்சாரு தெரியுமா? உனக்கும் எனக்கும் தொடர்பு இருக்குன்னு சொல்லி.. எத்தனை நாள் என்னை கொடுமை படுத்தினாருன்னு தெரியுமா?!

ஷங்கர் : நீ செய்யலைன்னா.. வேற யாரு? அவருக்கு பிஸினஸ்ல எதிரிங்க யாராவது?

ராதா : அவரோட பிஸினசை பத்தி நான் கேட்டதே இல்லை.. அவரும் என்கிட்ட எதையும் சொன்னதில்லை... இதைச் சொன்னா.. போலீஸ்காரங்க என்னை ஒரு மாதிரியா பார்க்கிறாங்க! எனக்கு தெரிஞ்சு.. அவருக்கு இருந்த ஒரே தொடர்பு.. அந்த கவிதா தான்.. அதைப் பத்தி கேக்க போயிதான் எங்களுக்குள்ளே இவ்வளவு விரிசல் ஏற்பட்டுச்சி!

ஷங்கர் : இன்னேரம் அவளையும் விசாரிச்சிருப்பாங்க..?

ராதா : என்ன சொல்றிங்க? உங்களையும் என்னையும் தவிர.. இந்த விஷயம் வேற யாருக்கும் தெரியாது.. போலீஸ்காரங்க கேட்டப்போ கூட நான் சொல்லலையே!

ஷங்கர் : நான் சொல்லீட்டேன்..

ராதா : சொல்லீட்டிங்களா?! தப்பு பண்னீட்டிங்க ஷங்கர்.. தப்பு பண்ணீட்டிங்க!

ஷங்கர் : என்னை காப்பாத்திக்க எனக்கு வேற வழி தெரியலை! அதான் பயத்தில ஏதோ உளறி கொட்டீட்டேன்..

ராதா : ஐய்யோ! அதனால நமக்கு நன்மை எதுவும் இல்லை! அந்த கவிதாவை விசாரிச்சா.. அப்புறம் போலீஸ்காரங்க கவனமெல்லாம் மறுபடியும் என் பக்கம்தான் திரும்பும்!

ஷங்கர் : என்ன சொல்ற ராதா? எனக்கு ஒன்னுமே புரியலை!ராதா : ஷங்கர்.. உங்க கவிதா எதுக்காக என் புருஷனை கொல்லனும்? அதனால அவளுக்கு என்ன லாபம்? அவரு இருக்கிற வரைக்கும் அவளுக்கு பணம் கொடுத்து உதவினாரு.. இறந்திட்டா? அவளுக்கு என்ன பங்கா கிடைக்கப் போவுது? எந்த லாபமும் இல்லாம.. எதுக்கு அவ அவரை கொல்லப் போறா? அதனாலதான் அவளைப்பத்தி நான் வாயே திறக்கலை.. தங்க முட்டை இடுர வாத்தை யாராவது அறுப்பாங்களா?

ராதா : சரி சரி.. இனி நீ இங்க தங்கினா ரெண்டு பேருக்கும் ஆபத்து.. முதல்ல இடத்தை காலி பண்ணு!



காட்சி: 8.

நடிகர்கள் 1. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் 2. கான்ஸ்டபிள் காசி

(காசி பேப்பரில் சில பெயர்களை எழுதி சுருட்டி எடுத்து வருகிறான்..)

காசி : சார்.. இதில ஒரு சீட்டை எடுங்க சார்!

அர்ஜுன் : என்னையா இது?

காசி : முடியலை சார்.. இதுக்கு மேலயும் இந்த கேஸ¤க்காக என்னால அலைய முடியலை சார்.. அதான் எல்லாரு பேரையும் எழுதி எடுத்துகிட்டு வந்திருக்கேன்.. நீங்க யாரு பேரை எடுக்கிறிங்களோ.. அவுங்க மேல கேஸை போட்டு உள்ளே தூக்கி போட்டுரலாம் சார்..

அர்ஜுன் : ஏன்.. அதையும் நீயே எடுக்க வேண்டியதுதானே!

காசி : ஹிஹி.. எடுத்துப் பார்த்தேன்.. செத்துப்போன ரகுனாத் பெயர் வந்திச்சி சார்.. அதான் கடுப்பாயி உங்க கிட்ட எடுத்திட்டு வந்தேன்..

அர்ஜுன் : நீ எதைத்தான் உருப்படியா செய்யிற..

காசி : அப்படின்னா.. நீங்க கண்டுபிடிக்க வேண்டியதுதானே சார்..

அர்ஜுன் : கண்டு பிடிச்சாச்சி..

காசி : எது.. கண்டு பிடிச்சாச்சா? யாரு சார்?

அர்ஜுன் : சொல்றேன் வா.. முதல்ல ராதா வீட்டுக்கு போவோம்..

காசி : அது வரைக்கும் தாங்காது சார்..

(தொடரும்..)

Thursday, June 11, 2009

யார் குற்றவாளி..?? (பகுதி 5 & 6)

காட்சி: 5.

நடிகர்கள் 1. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் 2. கான்ஸ்டபிள் காசி 3. ஷங்கர்

( இன்ஸ்பெக்டர் அர்ஜுன் காசியுடன் ஷங்கரின் அலுவலகத்திற்கு செல்கின்றனர்.)
(EFX : knock.. knock..)

அர்ஜுன் : மிஸ்டர் ஷங்கர்..

ஷங்கர் : ஆமாம்.. நீங்க..

காசி : சார்தான் இன்ஸ்பெக்டர் அர்ஜுன்.. நீங்க தங்கி இருக்கிற வீட்டுக்கு சொந்தக்காரர்..

மிஸ்டர் ரகுனாத்.. கொலை செய்யப் பட்டிருக்காரு.. தெரியுமா? அந்த கேஸை சார்கிட்டதான் கொடுத்திருக்காங்க..

ஷங்கர் : (ஆச்சரியமாக) கொலை செய்யப் பட்டாரா?

காசி : ஆமாம்.. எதுவுமே தெரியாத மாதிரி கேக்குறிங்க.. நீங்க அங்க தான தங்கி இருக்கிறிங்க?

அர்ஜுன் : மிஸ்டர் ஷங்கர்.. கடந்த வெள்ளிக்கிழமை சாயந்திரம் 3.00 மணியில இருந்து 5.00 மணி வரைக்கும் எங்க இருந்திங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?

ஷங்கர் : இன்ஸ்பெக்டர்.. நான் என் ஆபீஸ் விசயமா ஜோகூர் பாருவுக்கு போயிட்டு இன்னைக்கு காலையிலதான் திரும்பி வந்தேன்.. வீட்டுக்கு போகக் கூட நேரம் இல்லாம நேரா வேலைக்கு வந்திட்டேன்..

அர்ஜுன் : ம்ம்.. அப்போ.. இங்கே நடந்தது எதுவுமே உங்களுக்கு தெரியாதுன்னு சொல்றீங்க?
ஷங்கர் : நிச்சயமா தெரியாது..

அர்ஜுன் : ம்ம்.. சரி.. JB-யில எந்த ஹோட்டல்ல தங்கி இருந்திங்க? ரசீது இருக்கா..
ஷங்கர் : அது.. வந்து..

காசி : அதான் இவ்ளோ தூரம் வந்திட்டிங்களே.. முதல்ல ரசீதை காட்டுங்க..

ஷங்கர் : நான் ஹோட்டல்ல தங்கி இருக்கலை.. என்னோட நண்பர் ஒருத்தரோட வீட்டில தங்கி இருந்தேன்..

காசி : கவனிச்சிங்களா.. நண்பராம்! ஆம்பிளை நண்பரா...? இல்லை.. ஹஹஹ.. பொம்பளை நண்பரா??

ஷங்கர் : இங்க பாருங்க இன்ஸ்பெக்டர்.. இந்த மாதிரி அநாகரிகமா விசாரனை செய்யிறதா இருந்தா.. எனக்கு warrant அனுப்புங்க.. நானே நேர்ல வந்து பதில் சொல்றன்.. இப்போ நீங்க போகலாம்..

அர்ஜுன் : ம்ம்.. ஆக.. சட்டப்படி வரச்சொல்றீங்க.. ஏற்கெனவே உங்க மேல மிஸ்டர் ரகுனாத் அவுங்க அம்மா புகார் கொடுத்திருக்காங்க..

ஷங்கர் : என் மேலயா? என்னன்னு?

காசி : அதை அவரு சொல்ல மாட்டாரு! நான் தான் சொல்லனும்.. அதாவது.. உங்களுக்கும்.. திருமதி ராதா ரகுனாத்துக்கும் ஒரு மாதிரியான கசமுசா தொடர்பு இருக்கு.. அது ரகுனாத்துக்குக்கு தெரிஞ்சதும்.. அவரை நீங்க ரெண்டு பேரும் திட்டம் போட்டு தீர்த்துக் கட்டீட்டிங்கன்னு..

அர்ஜுன் : நாங்க நினைச்சா.. அந்த புகாரை வச்சி.. உங்களை அரெஸ்ட் பண்ணி உங்களை எங்க பாணியில விசாரனை பண்ண முடியும்.. ஆனா.. நீங்க ஒரு நல்ல கம்பெனியில வேலை செய்யிறிங்க.. அதை அனாவசியமா கெடுக்கக் கூடாதுன்னுதான் நாங்க கூட போலீஸ் உடையில வராம.. சாதாரண உடையில வந்திருக்கோம்.. சொல்லுங்க.. உங்களுக்கு நாங்க சட்டப்படி வரணும்னா.. அதுக்கும் நாங்க ரெடி..

காசி : சொல்லுங்க சார்.. உங்களுக்கும் அந்த ராதா மேடத்துக்கும் என்ன சம்பந்தம்.. அவுங்க மாமியார் சொல்ற மாதிரி ஏதாவது..

ஷங்கர் : ஐய்யய்யோ! அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை! நான் அவுங்க வீட்டுல தங்கி இருக்கேன்.. ராதாவுக்கு நான் தூரத்து சொந்தம்..

அர்ஜுன் : சொந்தம்னா..

ஷங்கர் : எனக்கு அவுங்க அத்தை பொன்னு!

காசி : அப்போ அவுங்க சொன்னது சரிதான்!!

அர்ஜுன் : ஸ்ஸ்ஸ்.. சொல்லுங்க..

ஷங்கர் : நாங்க ரெண்டு பேரும் சாதாரணமாத்தான் பழகறோம்.. ந்£ங்க நினைக்கிற மாதிரி ஏதும் இல்லை..

அர்ஜுன் : நாங்க நினைக்கலை.. எல்லாரும் சொல்றாங்க..

ஷங்கர் : சார்.. இதுல எனக்கு எந்த தொடர்பும் இல்லை.. ராதா எங்கிட்ட நல்லா பழகுவாங்க.. ஆரம்பத்துல நான் தனியாதான் ஒரு அறையில தங்கி இருந்தேன்.. எதேச்சையா என்னை பார்த்த ராதாதான் அவுங்க வீட்டுல வந்து தங்கிக்க சொன்னா..

அர்ஜுன் : உங்களுக்கும் ரகுனாத்துக்கும் ஏதாவது சண்டை.. கருத்து வேறுபாடு.. ஏதாவது..

ஷங்கர் : அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை.. அவரை நான் பாக்கிறதே ரொம்ப குறைவு..

காசி : ஆமாம்.. ஆமாம்.. அதுக்கெல்லாம் உங்களுக்கு எங்க நேரம் இருந்திருக்கும்..

அர்ஜுன் : சரி.. இந்த கொலையில உங்களுக்கு யாரு மேலயாவது சந்தேகம் இருக்கா?

ஷங்கர் : ம்ம்.. சந்தேகம்னா.. ரகுனாத்துக்கு கவிதாங்கிற ஒரு விதவைக்கும் தொடர்பு இருக்கிறதா ராதா என்கிட்ட சொல்லி இருக்கா..

அர்ஜுன் : ம்ம்.. கவிதா!!



காட்சி: 6

நடிகர்கள் 1. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் 2. கான்ஸ்டபிள் காசி

(அர்ஜுனும் காசியும் கவிதாவை விசாரணை செய்துவிட்டு வருகின்றனர்..)

காசி : என்ன சார் இது? இவுங்க இப்படி சொல்றாங்க? நாம ஒன்னு நினைச்சா.. இப்போ கதை எப்படி எப்படியோ போவுதே!

அர்ஜுன் : யாரை நம்புறதுன்னு எனக்கும் தெரியலை.. ஆனா.. இந்த கவிதாவுக்கு கொலையில தொடர்பு இருக்கிற மாதிரி தோணலை..

காசி : ஏன் சார்.. இந்த இங்கிலீஷ் படத்தில வர்ற மாதிரி.. அவரோட இன்சூரன்ஸ் பணத்துக்கு ஆசைப்பட்டு ராதாவே அவரை கொன்னுட்டாங்களோ?!

அர்ஜுன் : பரவாயில்லையே.. ரொம்ப நாளைக்கு பிறகு உன் புத்தி கொஞ்சம் வேலை செய்யுதே!

காசி : அப்போ உடனே அவரு என்னென்ன இன்சூரன்ஸ் எடுத்திருக்காருன்னு செக் பண்ணிருவோம் சார்..

அர்ஜுன் : அதை நான் ஏற்கெனவே செஞ்சிட்டேன்.. ரகுனாத்.. தன் பேருல பெரிய அளவில இன்சூரன்ஸ் பண்ணி இருக்காரு.. அவரு கொலை செய்யப் படுறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி.. 2 மில்லியனுக்கு ஒரு பாலிசி எடுத்திருக்காரு!

காசி : சார்.. அந்த பாலிசிக்கு யார் சார் வாரிசு?!

அர்ஜுன் : அவரு எந்த ஒரு உயிலும் எழுதலை.. இன்சூரன்ஸ் கம்பெனியிலயும் வாரிசு யாரையும் நியமனம் பண்ணலை.. அதனால பெரும் பகுதி தொகை.. ராதாவுக்குத் தான் போகும்..

காசி : அப்புறம் என்ன சார்.. இதை விட இந்த கொலைக்கு வேற என்ன motif வேணும்..

அர்ஜுன் : அவசரப் படாதைய்யா... முதல்ல.. போயி அந்த டாக்டரை பார்த்து விசாரிக்கலாம்.. post mortem ரிப்போர்ட்டு என்ன சொல்லுதுன்னு பார்த்திட்டு.. பிறகு முடிவு பண்ணலாம்!

(தொடரும்..)