தமிழோடு வாழ்பவன்..

My photo
சுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia
மனிதத்தை மதிக்கும் மனிதன்..

Sunday, February 22, 2009

புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக் கட்டுரை (2006) - பகுதி 6

குட்டிக் கவிதைகள்

இந்த நான்கு மாத காலத்தில் வெளிவந்த கவிதைகளில் 70 சதவிகிதம், குட்டிக் கவிதைகள். சொல்ல வந்த கருத்தை ‘சுருக்’கென்று சொல்லிவிடும் கவிதைகள். இவற்றில் 80 சதவிகிதம் கருத்தில் நிற்காத காதல் கவிதைகள் என்றாலும், ஒரு சில கவிதைகள் மனதில் ரோஜா முள்ளாக ஒட்டிக்கொள்ளவே செய்கிறன. இதோ, சில உதாரணங்கள்:

வயிற்றெரிச்சல்!
ஓட்டுப்போட
போனா
பேரையே காணோம்!

எந்தப் பெட்டிக்குள் போடுறது
என்
வயிற்றெரிச்சலை!
-புயல், ரவாங்

ஆவியின் ஜாதி..
இறந்தப் பின்னும் சமாதியில்...
ஜாதிப் பெயர்கள்.

ஆவியையும்
விட்டுவைப்பதில்லை
இவர்கள்!
-தயா யு.பி.தோட்டம்.

நிகழ்காலம்
அன்று
எங்களுக்குப் பெயர்
சொல்லபில்லைகள்
பிள்ளைகள் வேண்டும்
என்றோம்!

இன்று
பிள்ளைகள் தயவில்
எங்கள் முகவரி
முதியோர் இல்லத்தில்!...
-வசந்த முல்லை, புக்கிட் மெர்தாஜாம்

வேண்டாம்
பெண்களை பூக்களோடு
ஒப்பிடாதீர்கள்..

பூக்களெல்லாம்
இரத்தக் கண்ணீர்
வடிப்பதில்லை!

பெண்களை
நிலவுடன் ஒப்பிடாதீர்கள்..

நிலவு,
பாலியல் கொடுமையால்
இம்சிக்கப் படுவதில்லை!
-ச.விக்னேஸ்வரி, தாப்பா ரோட்

கடுகு சிறுத்தாலும் காரமற்றுப்போகுமா? கவிதை சிறுத்தாலும் கருத்தைக் கவராமல் போகுமா?! அவசர உலகத்தில், வாழ்க்கை சுறுசுறுப்பு ரயிலில் சுற்றிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பத்துப் பக்க கவிதைகளில், இதுபோன்ற கருத்துக்களைச் சொன்னால், பொறுமையுடன் நம்மால் படித்துக்கொண்டிருக்க முடியுமா? இல்லை, எழுதிக் கொடுக்க கவிஞனுக்குத்தான் நேரமிருக்கின்றதா?

No comments: