தமிழோடு வாழ்பவன்..

My photo
சுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia
மனிதத்தை மதிக்கும் மனிதன்..

Monday, June 15, 2009

யார் குற்றவாளி..? (பகுதி 7 & 8)

காட்சி: 7.

நடிகர்கள் 1. ராதா 2. ஷங்கர்

(ஷங்கர் வீட்டிற்கு வருகிறான்..)

ராதா : வா ஷங்கர்..

ஷங்கர் : என்ன ராதா.. என்னென்னமோ கேள்விப்பட்டேன்.. ஒரு வாரம் நான் ஊர்ல இல்லை.. அதுக்குள்ளே என்னென்னமோ நடந்திருச்சே..

ராதா : நடந்தது என்னவோ நடந்திருச்சி.. ஆனா எல்லாரு சந்தேகமும் என் மேல இல்லை விழுந்திருக்கு.. என்னை மாட்டிவிட என் மாமியாரு மட்டும் போதும் போல இருக்கு!

ஷங்கர் : அவரு உனக்கு பண்ண கொடுமைக்கு.. கடவுளா பார்த்து கொடுத்த தண்டனைன்னு எடுத்துக்க வேண்டியதுதான்..

ராதா : எதுக்கும் நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இரு.. போலீஸ்காரங்க எந்த நேரத்திலயும் உன்னை வந்து விசாரிக்கலாம்!

ஷங்கர் : அதெல்லாம் காலையிலயே வந்துட்டாங்க..

ராதா : வந்தாங்களா? என்ன கேட்டாங்க?

ஷங்கர் : வேற என்ன கேப்பாங்க.. உன் மாமியாருதான் உனக்கும் எனக்கும் தொடர்பு இருக்குன்னு வாய்க்கூசாம சொல்லி வைச்சிருக்காங்களே!

ராதா : அது அவுங்க தப்பில்லே! இந்த மனுசன் சாகரதுக்கு முன்னாடி அவுங்ககிட்ட அப்படி சொல்லி அழுது இருக்காரு! அதனாலதான் இந்த கொலைக்கும் எனக்கும் தொடர்பு இருக்குன்னு அவுங்க நினைக்கிறாங்க..
நல்ல வேளை.. நீ ஊர்ல இல்லாம இருந்தே.. இல்லேன்னா.. இன்னேரம் உன்னை தூக்கி உள்ளே வைச்சிருப்பாங்க..

ஷங்கர் : கூடிய சீக்கிரத்தில வைச்சிருவாங்கன்னு நினைக்கிறேன்..

ராதா : என்ன ஷங்கர்? ஏன் அப்படி சொல்றீங்க?

ஷங்கர் : ராதா.. உண்மையை சொல்லு.. என்ன நடந்திச்சி?

ராதா : ஷங்கர்? நீங்களுமா என்னை சந்தேகப் படறிங்க?

ஷங்கர் : எனக்கு வேற வழி தெரியலை.. என்னை நான் காப்பாத்தி ஆகனும்.. என்ன நடந்திச்சின்னு தெரிஞ்சாகனும்.. ராதா : ஹ¤ம்.. அவரை கொன்னது யாருன்னு தெரிஞ்சா.. அவங்களுக்கு ஆறடிக்கு ஒரு மாலையை வாங்கிப் போடுவேன்.. என்னை இந்த கொஞ்ச நாளா எப்படி எல்லாம் சித்ரவதை செஞ்சாரு தெரியுமா? உனக்கும் எனக்கும் தொடர்பு இருக்குன்னு சொல்லி.. எத்தனை நாள் என்னை கொடுமை படுத்தினாருன்னு தெரியுமா?!

ஷங்கர் : நீ செய்யலைன்னா.. வேற யாரு? அவருக்கு பிஸினஸ்ல எதிரிங்க யாராவது?

ராதா : அவரோட பிஸினசை பத்தி நான் கேட்டதே இல்லை.. அவரும் என்கிட்ட எதையும் சொன்னதில்லை... இதைச் சொன்னா.. போலீஸ்காரங்க என்னை ஒரு மாதிரியா பார்க்கிறாங்க! எனக்கு தெரிஞ்சு.. அவருக்கு இருந்த ஒரே தொடர்பு.. அந்த கவிதா தான்.. அதைப் பத்தி கேக்க போயிதான் எங்களுக்குள்ளே இவ்வளவு விரிசல் ஏற்பட்டுச்சி!

ஷங்கர் : இன்னேரம் அவளையும் விசாரிச்சிருப்பாங்க..?

ராதா : என்ன சொல்றிங்க? உங்களையும் என்னையும் தவிர.. இந்த விஷயம் வேற யாருக்கும் தெரியாது.. போலீஸ்காரங்க கேட்டப்போ கூட நான் சொல்லலையே!

ஷங்கர் : நான் சொல்லீட்டேன்..

ராதா : சொல்லீட்டிங்களா?! தப்பு பண்னீட்டிங்க ஷங்கர்.. தப்பு பண்ணீட்டிங்க!

ஷங்கர் : என்னை காப்பாத்திக்க எனக்கு வேற வழி தெரியலை! அதான் பயத்தில ஏதோ உளறி கொட்டீட்டேன்..

ராதா : ஐய்யோ! அதனால நமக்கு நன்மை எதுவும் இல்லை! அந்த கவிதாவை விசாரிச்சா.. அப்புறம் போலீஸ்காரங்க கவனமெல்லாம் மறுபடியும் என் பக்கம்தான் திரும்பும்!

ஷங்கர் : என்ன சொல்ற ராதா? எனக்கு ஒன்னுமே புரியலை!ராதா : ஷங்கர்.. உங்க கவிதா எதுக்காக என் புருஷனை கொல்லனும்? அதனால அவளுக்கு என்ன லாபம்? அவரு இருக்கிற வரைக்கும் அவளுக்கு பணம் கொடுத்து உதவினாரு.. இறந்திட்டா? அவளுக்கு என்ன பங்கா கிடைக்கப் போவுது? எந்த லாபமும் இல்லாம.. எதுக்கு அவ அவரை கொல்லப் போறா? அதனாலதான் அவளைப்பத்தி நான் வாயே திறக்கலை.. தங்க முட்டை இடுர வாத்தை யாராவது அறுப்பாங்களா?

ராதா : சரி சரி.. இனி நீ இங்க தங்கினா ரெண்டு பேருக்கும் ஆபத்து.. முதல்ல இடத்தை காலி பண்ணு!



காட்சி: 8.

நடிகர்கள் 1. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் 2. கான்ஸ்டபிள் காசி

(காசி பேப்பரில் சில பெயர்களை எழுதி சுருட்டி எடுத்து வருகிறான்..)

காசி : சார்.. இதில ஒரு சீட்டை எடுங்க சார்!

அர்ஜுன் : என்னையா இது?

காசி : முடியலை சார்.. இதுக்கு மேலயும் இந்த கேஸ¤க்காக என்னால அலைய முடியலை சார்.. அதான் எல்லாரு பேரையும் எழுதி எடுத்துகிட்டு வந்திருக்கேன்.. நீங்க யாரு பேரை எடுக்கிறிங்களோ.. அவுங்க மேல கேஸை போட்டு உள்ளே தூக்கி போட்டுரலாம் சார்..

அர்ஜுன் : ஏன்.. அதையும் நீயே எடுக்க வேண்டியதுதானே!

காசி : ஹிஹி.. எடுத்துப் பார்த்தேன்.. செத்துப்போன ரகுனாத் பெயர் வந்திச்சி சார்.. அதான் கடுப்பாயி உங்க கிட்ட எடுத்திட்டு வந்தேன்..

அர்ஜுன் : நீ எதைத்தான் உருப்படியா செய்யிற..

காசி : அப்படின்னா.. நீங்க கண்டுபிடிக்க வேண்டியதுதானே சார்..

அர்ஜுன் : கண்டு பிடிச்சாச்சி..

காசி : எது.. கண்டு பிடிச்சாச்சா? யாரு சார்?

அர்ஜுன் : சொல்றேன் வா.. முதல்ல ராதா வீட்டுக்கு போவோம்..

காசி : அது வரைக்கும் தாங்காது சார்..

(தொடரும்..)

2 comments:

sivanes said...

என்ன நண்பரே, யார் அந்த கொலைகாரன்? சீக்கிரம் புதிரை விடுவியுங்கள்

கிருஷ்ணா said...

ஹஹ.. அடுத்த இரண்டு பகுதிகளில் முற்றும்!