தமிழோடு வாழ்பவன்..

My photo
சுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia
மனிதத்தை மதிக்கும் மனிதன்..

Wednesday, June 10, 2009

குற்றவாளி யார்..?? (பகுதி 3 & 4)

காட்சி: 3.


நடிகர்கள் 1. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் 2. கான்ஸ்டபள் காசி

(ராதாவின் வீட்டின் முன் சற்று தொலைவில் காரில் கான்ஸ்டபள் காசி தூங்கிக் கொண்டிருக்கிறார். அங்கே இன்ஸ்பெக்டர் அர்ஜுன் வருகிறார்.)


EFX : 1. குறட்டை சத்தம். 2. Car door opening sound

அர்ஜுன் : யோவ்.. காசி.. எழுந்திருய்யா..

காசி : அ.. குட் மார்னிங் சார்..

அர்ஜுன் : ஹ¤ம்.. உன்னை என்ன செய்ய சொல்லி இங்க அனுப்பினேன்..?

காசி : சார்.. அது வந்து.. ராதா மேடம் வீட்டுக்கு சந்தேகப் படும்படியா யாரும் வராங்களான்னு பார்க்க சொன்னீங்க சார்..

அர்ஜுன் : நீ என்ன பண்ணிகிட்டு இருக்கே?

காசி : சார்.. கோவிச்சிக்காதிங்க சார்.. நேத்து ராத்திரி வீட்டில இட்லிக்கு மாவாட்டினேன்.. அந்த அசதியில தூங்கிட்டேன் சார்..

அர்ஜுன் : ஏன்.. காலையிலேயே போய் இட்லியை செஞ்சு கொடுத்துட்டு வர வேண்டியதுதானே! காசி : அதுக்கு எதுக்கு சார் நான்.. அதை எங்க அப்பா கவனிச்சிக்குவாரு..

அர்ஜுன் : ஹ¤ம்.. நல்ல குடும்பம்! சரி சரி.. ராத்திரி யாராவது வந்தாங்களா?

காசி : அப்படி யாரும் வந்ததா தெரியலை சார்..

அர்ஜுன் : எப்படி தெரியும்? கண்ணை தொறந்து வைச்சிருந்தாதானே எதுவும் தெரியறதுக்கு! சரி சரி வா.. கிளம்புவோம்.. நிறைய வேலை இருக்கு!

(EFX : Car ignition.. Car moves)


காட்சி: 4.

நடிகர்கள் 1. ராதா 2. பாலன்

( ராதா தன் நண்பன் பாலனுக்கு போன் செய்கிறாள்.)

(EFX : Telephone)
பாலன் : ஹலோ..

ராதா : ஹலோ.. பாலன்.. நான் ராதா பேசறேன்..

பாலன் : எல்லாத்தையும் கேள்விப் பட்டேன்.. ஆனா.. காரியத்துக்கு என்னால வர முடியலை.. என்னை மன்னிச்சிரு ராதா..

ராதா : எல்லா காரியத்தையும் பண்ணீட்டு.. காரியத்துக்கு வர முடியலைன்னு சொல்றியா?

பாலன் : என்ன ராதா உளர்றே? நான் என்ன பண்ணேன்..

ராதா : ஹ¤ம். அன்னைக்கு நான் ஏதோ ஆத்திரத்தில என் புருஷன் செத்தாலும் தேவலைன்னு சொன்னேன்.. அப்போ நீ என்னை பார்த்த பார்வை.. அவரை கொல்றதுக்காகத்தான்னு எனக்கு தெரியாம போச்சு!

பாலன் : விளையாடாதே ராதா.. நானாவது.. அவரைக் கொல்றதாதவது! உனக்கென்ன பைத்தியமா? ஆத்திரத்தில நீதான் உணர்ச்சி வசப்பட்டு அவரைக் கொன்னுட்டேன்னு நான் நினைச்சி வேதனைப் பட்டுகிட்டு இருக்கேன்..

ராதா : (கத்துகிறாள்) பாலன்..

பாலன் : ஆத்திரப்படாத்தே ராதா... உண்மையிலேயே என்ன நடந்திச்சின்னு என் கிட்ட சொல்லு.. எனக்கு தெரிஞ்ச நல்ல வக்கீல் ஒருத்தரு இருக்காரு.. எதுவா இருந்தாலும் அவரு பார்த்துக்குவாரு.. நீ எதுக்கும் கவலைப்படாதே!

ராதா : நீங்க சொல்றதைப் பார்த்தா என்னமோ அவரை நானே கொலை பண்ண மாதிரி இல்லை பேசறிங்க..

பாலன் : அதான உண்மை..?

ராதா : ஐய்யோ பாலன்.. நீங்களும் எங்க மாமியார் மாதிரி பேசாதிங்க.. ஏற்கெனவே போலீஸ்காரங்க அவுங்க பேச்சை கேட்டுகிட்டு என்னை சுத்தி சுத்தி வராங்க.. இதுல நீங்க வேற இப்படி யாரு கிட்டயும் சொல்லி வைக்காதிங்க..!

பாலன் : நீங்க பண்ணலைன்னா.. பிறகு யாரு பண்ணி இருப்பா?!

(தொடரும்..)

No comments: