தமிழோடு வாழ்பவன்..

My photo
சுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia
மனிதத்தை மதிக்கும் மனிதன்..

Wednesday, June 10, 2009

குற்றவாளி யார்..? (பகுதி 1 & 2)

காட்சி: 1.

நடிகர்கள் 1. மரகதம் 2. ராதா

(ராதாவின் கணவர் எதிர்பாராதவிதமாக அவரது அலுவலகத்தில் மரணமடைந்து விடுகிறார். ராதாதான் அவரை கொலை செய்துவிட்டாள் என்று அவளின் மாமியார்- மரகதம் அவளை கடிந்து கொள்கிறார்.)

மரகதம் : எனக்கு தெரியும்.. நல்லா இருந்த என் மகனை நீதாண்டி கொன்னுட்டே..! செய்யிறதெல்லாம் செஞ்சிட்டு.. ஒன்னும் தெரியாதவ மாதிரி நிக்கிறதை பாரு.. தப்பிச்சிரலாம்னு மட்டும் நினைக்காதே.. உன்னை சும்மா விட மாட்டேன்.. என் சின்ன மகன் ராஜன் வரட்டும்..

ராதா : உங்களுக்கு என்ன அத்தை வந்திச்சி..? நானே அவரு போன சோகத்தில இருக்கேன்.. என்னை ஏன் இப்படி சித்ரவதை செய்யிறிங்க..?

மரகதம் : சோகத்தில இருக்கியா?! இல்லை சந்தோஷமா இருக்கியான்னு இப்போ தெரிஞ்சிடும்.. போலீஸ்காரன் வந்து.. கேக்கிற விதத்தில கேட்டா.. எல்லா உண்மையும் வெளிய வந்திடும்.. என் மகன் உனக்கு அப்படி என்ன குறை வைச்சான்? காசு பணம் சேர்த்து வைக்கலையா? வீடு வாசல்னு கட்டிக் கொடுக்கலையா?

ராதா : அதெல்லாம் இருந்தா மட்டும் போதுமா? (EFX) ஏன் என் வாயை கிளர்றிங்க..

மரகதம் : பார்த்தியா.. உன் வாயாலயே உண்மை வருது..

ராதா : ஐய்யோ .. அத்தை.. கொஞ்சம் நிப்பாட்ரிங்களா.. இத்தனை நாள் உங்க மகனோட தொல்லை.. இப்ப உங்க தொல்லை!

(EFX : போலீஸ் வண்டி வரும் சத்தம்..)

மரகதம் : இப்போ தெரிஞ்சிரும்! போலீஸ்காரங்க வந்தா.. எல்லாம் தெரிஞ்சிரும்!

காட்சி : 2.

நடிகர்கள் 1. ராஜன் 2. மரகதம்

( ராஜன் அவன் அம்மாவிடம் சத்தம் போடுகிறான் )

ராஜன் : இப்போ உங்களுக்கு சந்தோஷமா? ஏம்மா நீங்க மட்டும் இப்படியெல்லாம் யோசிக்கிறிங்க.. அண்ணியை பார்த்தா கொலைகாரி மாதிரியா தெரியுது?

மரகதம் : நீ பேசாம இருடா.. உனக்கு ஒன்னும் தெரியாது.. அவதான் உங்க அண்ணனை கொன்னுட்டா.. இன்னும் கொஞ்ச நாள்ல உனக்கும்.. எல்லாருக்கும் உண்மை என்னான்னு தெரியத்தான் போகுது..

ராஜன் : அம்மா.. உண்மை என்னான்னு தெரியாம நாம இப்படி அவசரப் பட்டா.. பாதிக்கப் படப்போறது நாமதான்.. நம்ம குடும்ப கௌரவம்தான்.. இது ஏன் உங்களுக்கு புரிய மாட்டுது..

மரகதம் : யாரு அவசரப் படறாங்க.. நான் எதையும் பெரிசா எடுத்துக்காம இருந்ததாலதான் இப்போ என் மகனையே இழந்திட்டு நிக்கிறேன்.. அண்ணைக்கே உங்க அண்ணன் தலைப்பாடா அடிசிகிட்டான்..

ராஜன் : என்னம்மா சொல்றீங்க?

மரகதம் : டேய்.. ராஜா.. உங்க அண்ணி.. தப்பானவடா!

ராஜன் : அம்மா! என்னம்மா நீங்களே இப்படி சொல்றீங்க..

மரகதம் : இதை நான் சொல்லலை.. சாகறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி உங்க அண்ணன் அவனே எங்கிட்ட சொல்லி அழுதான்.. இந்த பாவி அதை பெரிசா எடுத்துக்காம அவனுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பிட்டேன்.. (அழுகிறாள்)

தொடரும்..

3 comments:

sivanes said...

விறுவிறுப்பான தொடர், விரைவில் தொடர்ச்சியை எதிர்பார்க்கிறோம்!

கிருஷ்ணா said...

தினம் இரண்டு காட்சிகளை எதிர்பார்க்கலாம் சிவனேசு..!

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்