தமிழோடு வாழ்பவன்..

My photo
சுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia
மனிதத்தை மதிக்கும் மனிதன்..

Thursday, June 11, 2009

யார் குற்றவாளி..?? (பகுதி 5 & 6)

காட்சி: 5.

நடிகர்கள் 1. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் 2. கான்ஸ்டபிள் காசி 3. ஷங்கர்

( இன்ஸ்பெக்டர் அர்ஜுன் காசியுடன் ஷங்கரின் அலுவலகத்திற்கு செல்கின்றனர்.)
(EFX : knock.. knock..)

அர்ஜுன் : மிஸ்டர் ஷங்கர்..

ஷங்கர் : ஆமாம்.. நீங்க..

காசி : சார்தான் இன்ஸ்பெக்டர் அர்ஜுன்.. நீங்க தங்கி இருக்கிற வீட்டுக்கு சொந்தக்காரர்..

மிஸ்டர் ரகுனாத்.. கொலை செய்யப் பட்டிருக்காரு.. தெரியுமா? அந்த கேஸை சார்கிட்டதான் கொடுத்திருக்காங்க..

ஷங்கர் : (ஆச்சரியமாக) கொலை செய்யப் பட்டாரா?

காசி : ஆமாம்.. எதுவுமே தெரியாத மாதிரி கேக்குறிங்க.. நீங்க அங்க தான தங்கி இருக்கிறிங்க?

அர்ஜுன் : மிஸ்டர் ஷங்கர்.. கடந்த வெள்ளிக்கிழமை சாயந்திரம் 3.00 மணியில இருந்து 5.00 மணி வரைக்கும் எங்க இருந்திங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?

ஷங்கர் : இன்ஸ்பெக்டர்.. நான் என் ஆபீஸ் விசயமா ஜோகூர் பாருவுக்கு போயிட்டு இன்னைக்கு காலையிலதான் திரும்பி வந்தேன்.. வீட்டுக்கு போகக் கூட நேரம் இல்லாம நேரா வேலைக்கு வந்திட்டேன்..

அர்ஜுன் : ம்ம்.. அப்போ.. இங்கே நடந்தது எதுவுமே உங்களுக்கு தெரியாதுன்னு சொல்றீங்க?
ஷங்கர் : நிச்சயமா தெரியாது..

அர்ஜுன் : ம்ம்.. சரி.. JB-யில எந்த ஹோட்டல்ல தங்கி இருந்திங்க? ரசீது இருக்கா..
ஷங்கர் : அது.. வந்து..

காசி : அதான் இவ்ளோ தூரம் வந்திட்டிங்களே.. முதல்ல ரசீதை காட்டுங்க..

ஷங்கர் : நான் ஹோட்டல்ல தங்கி இருக்கலை.. என்னோட நண்பர் ஒருத்தரோட வீட்டில தங்கி இருந்தேன்..

காசி : கவனிச்சிங்களா.. நண்பராம்! ஆம்பிளை நண்பரா...? இல்லை.. ஹஹஹ.. பொம்பளை நண்பரா??

ஷங்கர் : இங்க பாருங்க இன்ஸ்பெக்டர்.. இந்த மாதிரி அநாகரிகமா விசாரனை செய்யிறதா இருந்தா.. எனக்கு warrant அனுப்புங்க.. நானே நேர்ல வந்து பதில் சொல்றன்.. இப்போ நீங்க போகலாம்..

அர்ஜுன் : ம்ம்.. ஆக.. சட்டப்படி வரச்சொல்றீங்க.. ஏற்கெனவே உங்க மேல மிஸ்டர் ரகுனாத் அவுங்க அம்மா புகார் கொடுத்திருக்காங்க..

ஷங்கர் : என் மேலயா? என்னன்னு?

காசி : அதை அவரு சொல்ல மாட்டாரு! நான் தான் சொல்லனும்.. அதாவது.. உங்களுக்கும்.. திருமதி ராதா ரகுனாத்துக்கும் ஒரு மாதிரியான கசமுசா தொடர்பு இருக்கு.. அது ரகுனாத்துக்குக்கு தெரிஞ்சதும்.. அவரை நீங்க ரெண்டு பேரும் திட்டம் போட்டு தீர்த்துக் கட்டீட்டிங்கன்னு..

அர்ஜுன் : நாங்க நினைச்சா.. அந்த புகாரை வச்சி.. உங்களை அரெஸ்ட் பண்ணி உங்களை எங்க பாணியில விசாரனை பண்ண முடியும்.. ஆனா.. நீங்க ஒரு நல்ல கம்பெனியில வேலை செய்யிறிங்க.. அதை அனாவசியமா கெடுக்கக் கூடாதுன்னுதான் நாங்க கூட போலீஸ் உடையில வராம.. சாதாரண உடையில வந்திருக்கோம்.. சொல்லுங்க.. உங்களுக்கு நாங்க சட்டப்படி வரணும்னா.. அதுக்கும் நாங்க ரெடி..

காசி : சொல்லுங்க சார்.. உங்களுக்கும் அந்த ராதா மேடத்துக்கும் என்ன சம்பந்தம்.. அவுங்க மாமியார் சொல்ற மாதிரி ஏதாவது..

ஷங்கர் : ஐய்யய்யோ! அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை! நான் அவுங்க வீட்டுல தங்கி இருக்கேன்.. ராதாவுக்கு நான் தூரத்து சொந்தம்..

அர்ஜுன் : சொந்தம்னா..

ஷங்கர் : எனக்கு அவுங்க அத்தை பொன்னு!

காசி : அப்போ அவுங்க சொன்னது சரிதான்!!

அர்ஜுன் : ஸ்ஸ்ஸ்.. சொல்லுங்க..

ஷங்கர் : நாங்க ரெண்டு பேரும் சாதாரணமாத்தான் பழகறோம்.. ந்£ங்க நினைக்கிற மாதிரி ஏதும் இல்லை..

அர்ஜுன் : நாங்க நினைக்கலை.. எல்லாரும் சொல்றாங்க..

ஷங்கர் : சார்.. இதுல எனக்கு எந்த தொடர்பும் இல்லை.. ராதா எங்கிட்ட நல்லா பழகுவாங்க.. ஆரம்பத்துல நான் தனியாதான் ஒரு அறையில தங்கி இருந்தேன்.. எதேச்சையா என்னை பார்த்த ராதாதான் அவுங்க வீட்டுல வந்து தங்கிக்க சொன்னா..

அர்ஜுன் : உங்களுக்கும் ரகுனாத்துக்கும் ஏதாவது சண்டை.. கருத்து வேறுபாடு.. ஏதாவது..

ஷங்கர் : அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை.. அவரை நான் பாக்கிறதே ரொம்ப குறைவு..

காசி : ஆமாம்.. ஆமாம்.. அதுக்கெல்லாம் உங்களுக்கு எங்க நேரம் இருந்திருக்கும்..

அர்ஜுன் : சரி.. இந்த கொலையில உங்களுக்கு யாரு மேலயாவது சந்தேகம் இருக்கா?

ஷங்கர் : ம்ம்.. சந்தேகம்னா.. ரகுனாத்துக்கு கவிதாங்கிற ஒரு விதவைக்கும் தொடர்பு இருக்கிறதா ராதா என்கிட்ட சொல்லி இருக்கா..

அர்ஜுன் : ம்ம்.. கவிதா!!



காட்சி: 6

நடிகர்கள் 1. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் 2. கான்ஸ்டபிள் காசி

(அர்ஜுனும் காசியும் கவிதாவை விசாரணை செய்துவிட்டு வருகின்றனர்..)

காசி : என்ன சார் இது? இவுங்க இப்படி சொல்றாங்க? நாம ஒன்னு நினைச்சா.. இப்போ கதை எப்படி எப்படியோ போவுதே!

அர்ஜுன் : யாரை நம்புறதுன்னு எனக்கும் தெரியலை.. ஆனா.. இந்த கவிதாவுக்கு கொலையில தொடர்பு இருக்கிற மாதிரி தோணலை..

காசி : ஏன் சார்.. இந்த இங்கிலீஷ் படத்தில வர்ற மாதிரி.. அவரோட இன்சூரன்ஸ் பணத்துக்கு ஆசைப்பட்டு ராதாவே அவரை கொன்னுட்டாங்களோ?!

அர்ஜுன் : பரவாயில்லையே.. ரொம்ப நாளைக்கு பிறகு உன் புத்தி கொஞ்சம் வேலை செய்யுதே!

காசி : அப்போ உடனே அவரு என்னென்ன இன்சூரன்ஸ் எடுத்திருக்காருன்னு செக் பண்ணிருவோம் சார்..

அர்ஜுன் : அதை நான் ஏற்கெனவே செஞ்சிட்டேன்.. ரகுனாத்.. தன் பேருல பெரிய அளவில இன்சூரன்ஸ் பண்ணி இருக்காரு.. அவரு கொலை செய்யப் படுறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி.. 2 மில்லியனுக்கு ஒரு பாலிசி எடுத்திருக்காரு!

காசி : சார்.. அந்த பாலிசிக்கு யார் சார் வாரிசு?!

அர்ஜுன் : அவரு எந்த ஒரு உயிலும் எழுதலை.. இன்சூரன்ஸ் கம்பெனியிலயும் வாரிசு யாரையும் நியமனம் பண்ணலை.. அதனால பெரும் பகுதி தொகை.. ராதாவுக்குத் தான் போகும்..

காசி : அப்புறம் என்ன சார்.. இதை விட இந்த கொலைக்கு வேற என்ன motif வேணும்..

அர்ஜுன் : அவசரப் படாதைய்யா... முதல்ல.. போயி அந்த டாக்டரை பார்த்து விசாரிக்கலாம்.. post mortem ரிப்போர்ட்டு என்ன சொல்லுதுன்னு பார்த்திட்டு.. பிறகு முடிவு பண்ணலாம்!

(தொடரும்..)

2 comments:

sivanes said...

நல்ல சுவாரஸ்யமான பதிவு, தொடருங்கள் நண்பரே!

கிருஷ்ணா said...

நன்றி...!