தமிழோடு வாழ்பவன்..

My photo
சுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia
மனிதத்தை மதிக்கும் மனிதன்..

Sunday, February 22, 2009

புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக் கட்டுரை (2006) - பகுதி 4

புதுக்கவிதையில் வர்ணனை

புதுக்கவிதையின் முப்பெறும் உத்திகளில் ஒன்றான படிமமும் இந்த காலக்கட்டத்தில் வெளிவந்த கவிதைகளில், திறம்பட கையாளப் பட்டிருக்கின்ற்றது. இயற்கையை வர்ணிப்பதிலும் காதலை பாடும்பொழுதும், படிம உத்திகளை நிறைய கவிதைகளில் காணமுடிகிறது. பத்துமலையின் அழகினை, ஒரு கவிஞன் அழகாய் உருவகப் படுத்தி இருக்கிறான்:

“நடுக்குகையின் உச்சியில்
வானம் பார்க்க
வெற்றுக் குடை
விரித்திருக்கிறது
இயற்கை..!
-சந்துரு, சுங்கை திங்கி தோட்டம்
வர்ணனை இல்லாத காதலா? படிமம் இல்லாத காதல் கவிதையா? இந்த 121 நாட்களில் வந்த கவிதைகளில் எத்தனையோ வித்தியாசமான, வியக்கவைக்கும் அழகான வர்ணனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம், இது போல:

“அவசரமாய்
ஒரு காதல் கவிதை வேண்டும்..
காதலர் தினமாம்
கேட்கிறார்கள்..

ஏது எழுதுவது
நான்...?

உன் பார்வையில்
கவிழ்ந்து போன
கர்வத்தோடும்...
உன் புன்னகையில்
பூப்பெய்திய புலன்களோடும்... “
-செ.ராஜேஸ்வரி (சுங்கைப்பட்டாணி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)

“உன் பார்வையில் கவிழ்ந்து போன கர்வத்தோடும்... உன் புன்னகையில் பூப்பெய்திய புலன்களோடும்...” எனும் வர்ணனை வரிகள், நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்கின்றன.

No comments: