தமிழோடு வாழ்பவன்..

My photo
சுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia
மனிதத்தை மதிக்கும் மனிதன்..

Sunday, February 22, 2009

புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக் கட்டுரை (2006) - பகுதி 5

ஹைக்கூ கவிதைகள்

இதே காலகட்டத்தில், ஹைக்கூ கவிதைகளும் ஓரளவுக்கு வந்திருந்தன. மூன்றே அடிகளில் ஏழு உலகங்களை அளந்தார் ஸ்ரீகிருஷ்ணர், வாமணராக. மூன்று நான்கு அடிகளில் கருத்தை கவர்ந்து, கவனத்தை ஈர்க்கின்றனர், ஹைக்கூ கிருஷ்ணர்கள்! நாடு கண்டு வரும் முன்னேற்றத்தையும், தமிழ்பள்ளிகளின் இன்றைய நிலையையும் மிகச் சுலபாமாக, அனைவரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு, அழகாக படம் பிடித்துக் காட்டுகிறார் செர்டாங், ஆர்.சரவணன் இந்த ஹைக்கூவில்..

"தேசிய தினம் 47
உயர்ந்து நிற்கிறது
இரட்டைக் கோபுரம்
அண்ணாந்து பார்க்கிறது
தமிழ்ப்பள்ளி! "

இன்னும் சில நல்ல ஹைக்கூ கவிதைகள் இனையத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தன, இவற்றைப்போல்:

சகுனம் பார்க்கும்
கணவனிடம்
எப்படித் தெரிவிப்பது
பூனை வளர்க்கும் ஆசையை?”

***
ஒரு கொசு
உயிரை விட்டது
ஜீனகாருண்ய
புத்தகத்தில்!”

உலகமெலாம் தமிழோசை பரவும் வகை செய்தல் வேண்டும் என்றான் பாவேந்தன். அதற்கேற்ப, இணையத்தின் வழியும் நல்ல விஷயங்களை தமிழ் வழி படிக்கின்ற வாய்ப்பும் இப்பொழுது இருக்கின்றது. உலகமே உள்ளங்கை அளவு குறுகிவிட்டது இணையத்தின் இயக்கத்தால். இணையத்தில் வரும் இதுபோன்ற ஒரு சில கவிதைகளை வாசகர்களின் வசதிக்காக இதழாசிரியர்கள் அவ்வப்போது பிரசுரிக்கிறார்கள். இறக்குமதி கவிதைகள் என்பதால், இவற்றையும் நாம் ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ளவில்லை. இருந்தாலும், நல்ல கவிதைகள் இவை என்பதால், யாம் பெற்ற இன்பத்தை நீங்களும் பெறவேண்டும் என்ற நோக்கிலே, இவற்றையும் உங்கள் பார்வைக்கு படைக்கிறோம்.

(இன்னும் இருக்கிறது)

No comments: